மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு..

Published:

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தலா 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனியார் கழிவு நீர் கிணற்றை தூய்மைப்படுத்தும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, ஏழ்மையான தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உரிய நிவாரணம் வழங்குமாறு அரசின் கவனத்தை ஈர்ப்பதாகு தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்று பேர் கிணற்றை தூய்மைப்படுத்தும் போது உயிரிழந்துள்ளாதவும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இந்த பணியை மேற்கொள்வதற்கு மாநகாட்சி அதிகாரிகளிடம் உரிய அனுமதி எதுவும் பெறாமல் தனிப்பட்ட முறையில் தான் பணி செய்துள்ளார். நீதிமன்றம் யார் பொறுப்போ அவர்கள் 10 லட்சம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க அறிவுறுத்தியுள்ளது. இந்த விபத்தில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், இருந்தாலும் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கி பின்பு தனியார் நிறுவனத்திடம் பெற்று கொள்ளலாம் என முதலமைச்சர் தெரிவித்ததை தொடர்ந்து 10 லட்சம் வழங்கப்படுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தான் இயந்திரங்கள் வாங்க கூடுதல் நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், உரிய முறையில் மாநகராட்சிக்கு தெரிவித்திருந்தால் இயந்திரம் மூலம் கழிவு அகற்றப்பட்டு இருக்கும். இந்த விபத்து நடந்து இருக்காது என்றார்.

202204221245293319 Tamil News Tamil news 3 workers killed in poison gas attack in Madurai MEDVPF - 2026

Related articles

Recent articles

spot_img