மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உணவுக்காக ஊருக்குள் இறங்கி வரும் யானைகளைக் கத்தி, வேல்கம்பு கொண்டு மனித இனம் துரத்தி வருகிறது. .
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் எப்போதும் யானைகளை அரக்கத்தனத்துடன் விரட்டும் விவசாயிகள் மத்தியில், மின்வேலியில் சிக்கி யானைகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அங்குள்ள விவசாயிகள் அக்கறையுடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியில் உலவி வருகின்றன. திடீரென மணல்மேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அந்த யானைகள் புகுந்தன.
உடனடியாக நரசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பரமேஸ்வரன் பாளையத்தில் உள்ள ஆனந்தன் என்பவரது விவசாய நிலத்தின் வழியாக யானைகள் வந்ததன. அந்த தோட்டத்தில் மின் வேலி இருப்பதைப் பார்த்த விவசாயிகள் சிலர், ‘அந்த வழியாக மின்வேலி இருக்கு. பாத்து போங்க சாமீ’ என்று அன்போடு அறிவுறுத்திய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, ‘மருதமலை பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைக் கூட்டம் தற்போது பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ளது. இதில் 2 மாத ஆண் யானை குட்டி ஒன்றும் உள்ளது’ என்று தகவல் தெரிவித்தனர்.
Z class security for adorable Kutty (baby) elephants by the elephant family. I can hear villagers say empathetically 'let the kutty go'..absolutely heartwarming ❤️ vc-a forward pic.twitter.com/kRGeh9J0ls
— Supriya Sahu IAS (@supriyasahuias) April 24, 2022