ரஷ்ய விஞ்ஞானிகள்    மருத்துவாழ் மலை அனுமானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு…

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 4 பேர்   மருத்துவாழ் மலை உச்சிக்கு சென்று அனுமான் சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் செய்து வழிபட்டனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பதியில் மருந்து வாழ் மலை அமைந்து உள்ளது. இந்த மலை சுமார் 2 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்டது ஆகும். இந்த மலையை சுற்றி 16 கிலோ மீட்டர் கிரிவலப் பாதை அமைந்து உள்ளது. 
இந்த மலையின் உயரத்தை அந்தப்பகுதி மக்கள் ஒன்றாம் மடம், இரண்டாம் மடம், மூன்றாம் மடம் மற்றும் மொட்டை (உச்சி) என நான்கு பகுதிகளாக பிரித்து கூறுகின்றனர். இந்த நான்கு பகுதிகளிலும் ஒவ்வொரு கோவில் உள்ளது. 
பக்தர்கள் மலையில் நடந்து சென்று தங்களால் எந்த அளவிற்கு மலையின் உயரத்தை அடைய முடியுமோ அந்த அளவிற்கு நடந்து சென்று அங்கு இருக்கும் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்புவது வழக்கம். அந்த அளவுக்கு ஆன்மீகம் நிறைந்த மலையாக இந்த மலை அமைந்து உள்ளது. மேலும் இந்த மலைப் பகுதி முழுவதும் அரிய வகையிலான மூலிகைகள் வளர்வதாக கூறப்படுகிறது. 
எனவே தற்போது இந்த மலை முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இத்தனை சிறப்புகள் மிக்க மருந்துவாழ் மலைக்கு  தற்போது விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள்  அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர்.
மேலும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மலையில் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஞாயிற்று கிழமை அதிகாலையில் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஆன்மீக குழுவினர் ஒவ்வொரு வாரமும் மருத்துவாழ் மலையில் ஆன்மீக நடை பயணமாக உச்சிக்கு சென்று அங்குள்ள 5 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். 
அப்படி சென்ற பக்தர்களுடன்  கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 4 பேர்   மலை உச்சிக்கு சென்று உள்ளனர். அங்கு சென்று அனுமான் சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் அந்த மலையை பற்றிய சிறப்புகளை ஆன்மீக பக்தர்களிடம் கேட்டு வியந்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories