விழுப்புரம்: சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Inscription - 2026

கப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலில் சோழர்கால கல்வெட்டு கண்டறியப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், கப்பூர் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் சோழர் கால கல்வெட்டை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் த.ரமேஷ், விழுப்புரம் கணிப் பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது, கப்பூர் ஊரின் வடக்கே செய்தருளி ஈஸ்வரர் என்னும் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவில் கருவறையின் தென்கிழக்குப் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி ஆண்டான கி.பி.1,072 -ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் இந்த ஊர் கப்பூர் என்றும், இங்கு இருக்கின்ற இறைவனை செய்தருளு நாயனார் என்றும் அழைக்கப்பட்டுருந்தது.

மேலும் இந்த கோவிலில் சந்தி விளக்கு எரிப்பதற்கு மூன்று பசுகளை தானமாகக் கொடுக்கப்பட்டது. அந்த பசுக்களை இக்கோவிலையை நிர்வகித்த நேராபிராணன் என்பவருக்கு கொடுக்கபட்டதாக இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மேலும் இதிலிருந்து இந்த ஊர் சோழர் காலத்திலிருந்து கப்பூர் என்று வழங்கப்பட்டதை அறியலாம். இந்த கோவிலில் இரண்டு விஷ்ணு சிற்பங்களும், ஒரு விநாயகர் சிற்பமும், மீசையுடன் கூடிய லகுலீசர் சிற்பமும் பல்லவர் கால வரலாற்றில் சிறந்தது.

இந்த சிவன் கோயில் பல்லவர் காலத்தில் இருந்தது. அதன் பின் சோழர் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது. இந்த கோவிலில் அதிட்டானம் மட்டும் கருங்கல்லை கொண்டு கட்டப்பட்டது.

மற்றவைகள் எல்லாம் செங்கலை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த கோயிலை இந்து சமய அறநிலையத் துறையினர் பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories