பூமிக்குத் திரும்பும் ராக்கெட்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

rocket - 2026

செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு பூமிக்குத் திரும்பும் ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் முயற்சி முதல் முறையிலேயே வெற்றிபெற்றுள்ளது.

விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு, அவற்றைத் தூக்கிச் செல்லும் ராக்கெட் முக்கியப் பங்கு வகிக்கிறது. செயற்கைக் கோள் ஏவுவதில் அதிகம் செலவு வைப்பதும் ராக்கெட் தான்.

இதற்காக தான் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பெரும் தொகையை செலவு செய்துவந்தது. அதன்பிறகு வந்த தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கான் ராக்கெட் காரணமாக ராக்கெட் ஏவுவதன் செலவு கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டது.

காரணம் ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் வகையில் அதை வடிவமைத்தது தான். செயற்கைக் கோளை விண்வெளியில் ஏவியவுடன், இந்த ஃபால்கான் 9 பூஸ்டர் மீண்டும் பூமிக்கு தரையிரங்கும். இதனால், பல மில்லியன் டாலர்கள் செலவு குறைந்து, ராக்கெட் ஏவப்படுவதற்கான தொகையும் குறைந்தது.

இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கான் 9 போல் அல்லாமல் பூஸ்டரை பூமிக்கு திரும்பும் வழியிலேயே அதை மீட்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது ராக்கெட் லேப் நிறுவனம். ‘There And Back Again’ என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் முதல் முயற்சியிலேயே ராக்கெட் பூஸ்டரை வெற்றிகரமாக கைப்பற்றி வெற்றிபெற்றிருக்கிறது ராக்கெட் லேப் நிறுவனம்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ராக்கெட் லேப் சிறு சிறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் பணிகளை செய்துவருகிறது.

நியூஸிலாந்தில் அமைந்துள்ள இந்த நிறுவனம், 34 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது.

செயற்கைக் கோள்களை சுமந்து சென்ற ‘எலக்ட்ரான்’ என்று பெயரிடப்பட்ட பூஸ்டர், வெற்றிகரமாக செயற்கைக் கோள்களை நிலை நிறுத்திய பின் பூமிக்குத் திரும்பியது.

எலக்ட்ரான் 6,500 அடி உயரத்தில் வந்து கொண்டிருந்தபோது அதன் பாராஷுட்டுகள் விரிந்து 22 கிலோமீட்டர் வேகத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போது, ராக்கெட் லேபின் சிகோர்ஸ்க எஸ்-92 ஹெலிகாப்டர் நீண்ட கயிறு மூலம், எலக்ட்ரான் பூஸ்டரை வெற்றிகரமாகப் பிடித்தது. எனினும், சோதனை முயற்சியின்போது இருந்ததை விட எடை மாறுபாட்டை உணர்ந்ததால், விமானிகள் பூஸ்டரை பசிபிக் கடலில் விழ வைத்தனர்.

எனினும் இந்த முயற்சி வெற்றிகரமானதாகவேப் பார்க்கப்படுகிறது. அதோடு, ஸ்பேஸ் எக்ஸை விட மாறுபட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில், ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கான் 9 பூஸ்டர் தரையிறங்கும்போது அதில் உள்ள எரிபொருள் மூலம் தரையிறங்கும். ஆனால், எலக்ட்ரான் பாராசூட் மூலம் கடலில் விழ வைக்கப்படும். இதற்கு எரிபொருள் தேவையில்லை.

கடலில் விழ வைப்பதற்கு பதிலாக ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் முயற்சி வெற்றிபெற்றதையடுத்து செலவு இன்னும் குறைவாகும் என்று ராக்கெட் லேபை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். எலக்ட்ரான் ஃபர்ஸ்ட் ஸ்டேஜை ஹெலிகாப்டர் மீட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories