மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரை-அதிமுக புறக்கணிப்பு..

Published:

தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தி.மு.க. செய்த சாதனைகளை பட்டியலிட்டு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியபோது பேரவையில் இருப்பபதை அதிமுகவினர் புறக்கணித்தனர்.

இன்று காலை சட்டசபை கூடியதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது இந்த ஓராண்டில் தி.மு.க. செய்த சாதனைகளை பட்டியலிட்டு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். 54 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். இந்த நிலையில் அவரது உரையை புறக்கணிக்கும் வகையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சபை கூடியதும் சட்டசபைக்குள் வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலக வளாகத்தில் உள்ள அவர்களது அறையில் அமர்ந்து கொண்டனர்.

இதனால் சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் காலியாக இருந்தன.

202205041434239685 Governor has forwarded to the Ministry of the Interior the SECVPF - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img