இது… பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல… மக்கள் விரோத செயலும் கூட!

modi rahul
modi rahul

தற்போது வரை உலகில் 58 கோடியே 85 லட்சத்து 96 ஆயிரத்து 904 பேர், அதாவது உலகின் மொத்த மக்கள் தொகையில் 7.5 விழுக்காடு மக்கள் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை 12 கோடியே,38 லட்சத்து 11 ஆயிரத்து 908 பேர், அதாவது 10.6 விழுக்காடு பேர் முதல் தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கின்றனர். மற்றவர்களை விட மிக குறைந்த காலத்தில் இந்த இலக்கை நாம் எட்டியுள்ளோம்.

அதே போல், உலகில் இதுவரை 26 கோடியே 20 லட்சத்து 26 பேர் (3.3%) இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் 2 கோடியே 54 லட்சத்து 56 ஆயிரத்து 864 பேர் (2.2%) பேர் செலுத்தி கொண்டிருக்கின்றனர். விரைவில் உலக சராசரியை விட அதிகம் செலுத்துவோம். நமக்கு முன்னாலேயே சில நாடுகள் தடுப்பூசி செலுத்த தொடங்கியதே இதற்கு காரணம்.

vaccination drive
vaccination drive

உற்பத்தி, காலாவதி மற்றும் செலுத்தும் திறனை கணக்கில் கொண்டு, எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை என்று வயதின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், விளைவுகள் குறித்து எதையும் சிந்திக்காமல் மக்களின் உணச்சிகளை தூண்டும் விதமாக அனைவருக்கும் உடனே செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன எதிர்க்கட்சிகள்.

மத்திய அரசின் திட்டமிடலை தவிடு பொடியாக்க வேண்டுமென்ற சிறுபிள்ளைத்தனமான உள்நோக்க அரசியலால் குழப்பமே உருவானது. ஆனாலும், பதட்டத்தை தணிக்கும் வகையில் 18 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கும் தடுப்பூசிக்கு அனுமதி தந்த மத்திய அரசு, அதன் நோக்கம் நிறைவேற, மாநில அரசுகளும், தனியார் தடுப்பூசி மையங்களும் தடுப்பூசியை பெற்று மக்களுக்கு செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,மீண்டும் மத்திய அரசே தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைப்பது முறையல்ல.

மேலும், இதுவரையில் இருந்த தடுப்பூசி திட்டங்களுக்கும் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. மற்றவை நீண்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டன. ஆனால், கொரோனா விவகாரத்தை பொறுத்த வரையில், குறுகிய காலகட்டத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாநில அரசுகளின் சுகாதார கட்டமைப்பு மற்றும் தனியாரின் பங்களிப்பில்லாமல் அதை குறித்த நேரத்தில் நிறைவேற்ற முடியாது.

ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தடுப்பூசி பற்றாக்குறை குறித்து தவறான விமர்சனங்களை செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உற்பத்தி, சேமிப்பு, செயல்படுத்தும் இயந்திரம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறே செலுத்த முடியும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் அல்லது புரிந்தும் வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளை தூண்டி விடும் மனப்பான்மையோடு அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவது முறையல்ல.

எதிர்க்கட்சிகள் மக்களின் பதட்டத்தை அதிகரிக்க செய்வது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, மக்கள் விரோத செயலும் கூட.

  • நாராயணன் திருப்பதி.
    செய்தி தொடர்பாளர், பாஜக.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

Entertainment News

Popular Categories