இது… பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல… மக்கள் விரோத செயலும் கூட!

modi rahul
modi rahul

தற்போது வரை உலகில் 58 கோடியே 85 லட்சத்து 96 ஆயிரத்து 904 பேர், அதாவது உலகின் மொத்த மக்கள் தொகையில் 7.5 விழுக்காடு மக்கள் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை 12 கோடியே,38 லட்சத்து 11 ஆயிரத்து 908 பேர், அதாவது 10.6 விழுக்காடு பேர் முதல் தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கின்றனர். மற்றவர்களை விட மிக குறைந்த காலத்தில் இந்த இலக்கை நாம் எட்டியுள்ளோம்.

அதே போல், உலகில் இதுவரை 26 கோடியே 20 லட்சத்து 26 பேர் (3.3%) இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் 2 கோடியே 54 லட்சத்து 56 ஆயிரத்து 864 பேர் (2.2%) பேர் செலுத்தி கொண்டிருக்கின்றனர். விரைவில் உலக சராசரியை விட அதிகம் செலுத்துவோம். நமக்கு முன்னாலேயே சில நாடுகள் தடுப்பூசி செலுத்த தொடங்கியதே இதற்கு காரணம்.

vaccination drive
vaccination drive

உற்பத்தி, காலாவதி மற்றும் செலுத்தும் திறனை கணக்கில் கொண்டு, எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை என்று வயதின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், விளைவுகள் குறித்து எதையும் சிந்திக்காமல் மக்களின் உணச்சிகளை தூண்டும் விதமாக அனைவருக்கும் உடனே செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன எதிர்க்கட்சிகள்.

மத்திய அரசின் திட்டமிடலை தவிடு பொடியாக்க வேண்டுமென்ற சிறுபிள்ளைத்தனமான உள்நோக்க அரசியலால் குழப்பமே உருவானது. ஆனாலும், பதட்டத்தை தணிக்கும் வகையில் 18 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கும் தடுப்பூசிக்கு அனுமதி தந்த மத்திய அரசு, அதன் நோக்கம் நிறைவேற, மாநில அரசுகளும், தனியார் தடுப்பூசி மையங்களும் தடுப்பூசியை பெற்று மக்களுக்கு செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,மீண்டும் மத்திய அரசே தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைப்பது முறையல்ல.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

மேலும், இதுவரையில் இருந்த தடுப்பூசி திட்டங்களுக்கும் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. மற்றவை நீண்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டன. ஆனால், கொரோனா விவகாரத்தை பொறுத்த வரையில், குறுகிய காலகட்டத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாநில அரசுகளின் சுகாதார கட்டமைப்பு மற்றும் தனியாரின் பங்களிப்பில்லாமல் அதை குறித்த நேரத்தில் நிறைவேற்ற முடியாது.

ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தடுப்பூசி பற்றாக்குறை குறித்து தவறான விமர்சனங்களை செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உற்பத்தி, சேமிப்பு, செயல்படுத்தும் இயந்திரம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறே செலுத்த முடியும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் அல்லது புரிந்தும் வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளை தூண்டி விடும் மனப்பான்மையோடு அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவது முறையல்ல.

எதிர்க்கட்சிகள் மக்களின் பதட்டத்தை அதிகரிக்க செய்வது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, மக்கள் விரோத செயலும் கூட.

  • நாராயணன் திருப்பதி.
    செய்தி தொடர்பாளர், பாஜக.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

Entertainment News

Popular Categories