இது… பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல… மக்கள் விரோத செயலும் கூட!

modi rahul
modi rahul

தற்போது வரை உலகில் 58 கோடியே 85 லட்சத்து 96 ஆயிரத்து 904 பேர், அதாவது உலகின் மொத்த மக்கள் தொகையில் 7.5 விழுக்காடு மக்கள் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை 12 கோடியே,38 லட்சத்து 11 ஆயிரத்து 908 பேர், அதாவது 10.6 விழுக்காடு பேர் முதல் தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கின்றனர். மற்றவர்களை விட மிக குறைந்த காலத்தில் இந்த இலக்கை நாம் எட்டியுள்ளோம்.

அதே போல், உலகில் இதுவரை 26 கோடியே 20 லட்சத்து 26 பேர் (3.3%) இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் 2 கோடியே 54 லட்சத்து 56 ஆயிரத்து 864 பேர் (2.2%) பேர் செலுத்தி கொண்டிருக்கின்றனர். விரைவில் உலக சராசரியை விட அதிகம் செலுத்துவோம். நமக்கு முன்னாலேயே சில நாடுகள் தடுப்பூசி செலுத்த தொடங்கியதே இதற்கு காரணம்.

vaccination drive
vaccination drive

உற்பத்தி, காலாவதி மற்றும் செலுத்தும் திறனை கணக்கில் கொண்டு, எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை என்று வயதின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், விளைவுகள் குறித்து எதையும் சிந்திக்காமல் மக்களின் உணச்சிகளை தூண்டும் விதமாக அனைவருக்கும் உடனே செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன எதிர்க்கட்சிகள்.

மத்திய அரசின் திட்டமிடலை தவிடு பொடியாக்க வேண்டுமென்ற சிறுபிள்ளைத்தனமான உள்நோக்க அரசியலால் குழப்பமே உருவானது. ஆனாலும், பதட்டத்தை தணிக்கும் வகையில் 18 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கும் தடுப்பூசிக்கு அனுமதி தந்த மத்திய அரசு, அதன் நோக்கம் நிறைவேற, மாநில அரசுகளும், தனியார் தடுப்பூசி மையங்களும் தடுப்பூசியை பெற்று மக்களுக்கு செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,மீண்டும் மத்திய அரசே தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைப்பது முறையல்ல.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

மேலும், இதுவரையில் இருந்த தடுப்பூசி திட்டங்களுக்கும் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. மற்றவை நீண்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டன. ஆனால், கொரோனா விவகாரத்தை பொறுத்த வரையில், குறுகிய காலகட்டத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாநில அரசுகளின் சுகாதார கட்டமைப்பு மற்றும் தனியாரின் பங்களிப்பில்லாமல் அதை குறித்த நேரத்தில் நிறைவேற்ற முடியாது.

ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தடுப்பூசி பற்றாக்குறை குறித்து தவறான விமர்சனங்களை செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உற்பத்தி, சேமிப்பு, செயல்படுத்தும் இயந்திரம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறே செலுத்த முடியும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் அல்லது புரிந்தும் வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளை தூண்டி விடும் மனப்பான்மையோடு அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவது முறையல்ல.

எதிர்க்கட்சிகள் மக்களின் பதட்டத்தை அதிகரிக்க செய்வது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, மக்கள் விரோத செயலும் கூட.

  • நாராயணன் திருப்பதி.
    செய்தி தொடர்பாளர், பாஜக.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories