December 5, 2025, 8:41 PM
26.7 C
Chennai

திருமழிசை சந்தையில் குறைவு! வெளியில் பல மடங்கு உயர்வு! காய்கறி விலையால் பொதுமக்கள் அதிர்ச்சி!

vegetable market chennai
vegetable market chennai

சென்னையில் திருமழிசை சந்தையை விட பல மடங்கு அதிகமான விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையின் பிரதான கோயம்பேடு காய்கறிச் சந்தை மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவுவதாகக் கூறப் பட்டதால், கோயம்பேடு சந்தை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தை செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகர எல்லையில் இருந்து சுமார் 25 கிமீ., தொலைவில் உள்ள திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தை தொடங்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து பொருட்களை வாங்கி வரும் சில்லறை வியாபாரிகள், தங்களுக்கு போக்குவரத்துச் செலவே கடுமையாக உயர்ந்து பெரும் சுமையைக் கொடுப்பதாகக் கூறுகின்றனர்.

இதனால் திருமழிசையில் 8 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ தக்காளி நகர்ப்புறங்களில் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் சந்தையை விட சிறு கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் பல மடங்கு விலை உயர்வுடன் விற்பனையாகிறது. இது சென்னைவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனிடையே, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கொரோனாவால் பாதிக்கப் பட்ட தொழிலாளர்கள் குணமடைந்து வருவதாக தகவல் வெளியானது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து வந்த 320 தொழிலாளர்கள் உள்பட  413 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்கெனவே 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து 84 பேரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்து 28 பேரும், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 34 பேரும் என மொத்தம் 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இவர்கள் அனைவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories