கரெண்ட் கட்டால் மாறிய மணமகள்.. மாற்றி தாலிக்கட்டிய மாப்பிள்ளை.‌.!

marriage 3 - 2026

மின் வெட்டால் தூங்க முடியவில்லை, படிக்க முடியவில்லை, டிவி பார்க்க முடியவில்லையென்ற புகார்களை கேள்வி பட்டிருப்போம்,

ஆனால் தற்போது திருமணம் ஒன்றில் மாப்பிள்ளை, மண்பெண்ணிற்கு பதிலாக மணப்பெண்ணின் சகோதரிக்கு தாலி கட்டிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனியில் இரண்டு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்த பொற்றோர் முடிவு செய்திருந்தனர்.

இதற்காக இரண்டு மாப்பிள்ளை பார்த்து தேதியும் குறித்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ரமேஷ்லாலின் இரண்டு மகள்களான நிகிதா மற்றும் கரிஷ்மாவிற்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது.

இரவு நேரத்தில் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மணப்பெண்கள் இருவரும் ஒரே மாதிரியான உடை மற்றும் முக்காடு போட்டிருந்துள்ளனர்.

இதனால் இரு மணப்பெண்களும் ஒரே மாதிரியாக இருந்துள்ளனர். அப்போது திருமணத்தை நடத்தும் பண்டிதர் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

மணமகன் கையில் தாலியை கொடுத்து கட்டவும் வைத்துள்ளார். தொடர்ந்து திருமண மண்டபத்தில் இருந்த அக்னி குண்டத்தை சுற்றி வரும்படி கூறியுள்ளார். அப்போதும் மணப்பெண்கள் மாறியது யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து மணமகன்கள், புதுமணப்பெண்ணை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்று பார்த்த போது தான் மணப்பெண் மாறிய விவகாரம் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மணப்பெண்ணும், மாப்பிள்ளை குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடமே கலவரமாக மாறியது.

இதனையடுத்து சிறிது நேரத்தில் நடந்த நிகழ்வுகளை புரிந்து கொண்ட இரு வீட்டாரும் சமரசம் செய்து கொண்டனர். இதனையடுத்து திருமண புரோகிதரிடம் இரண்டு குடும்பத்தினரும் முறையிட்டுள்ளனர்.

அதற்கு அந்த புரோகிதர் அடுத்த நாள் மீண்டும் ஒரு முறை திருமண சடங்குகள் நடைபெற்று சரியான மணபெண்ணுடன் மாப்பிள்ளையை அனுப்பி வைக்கும்படி கூறினார். மின் வெட்டு காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் மணப்பெண் மாறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories