பிரதம மந்திரி பீமா யோஜனாவின் கீழ் SBI தரும் சலுகை!

sbi - 2026

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மிகக் குறைந்த தொகையில் பணத்தில் காப்பீட்டு வசதியை வழங்குகிறது.

அரசாங்கத்தின் திட்டங்களான பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (பிஎம்எஸ்பிஒய்) மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பிஎம்ஜெஜெபிஒய்) ஆகியவற்றின் கீழ், எஸ்பிஐ ஆண்டுக்கு வெறும் ரூ.342 முதலீட்டில் ரூ.4 லட்சம் வரை காப்பீட்டை வழங்குகிறது.

இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட எஸ்பிஐ, ‘உங்கள் தேவைக்கு ஏற்ப காப்பீடு செய்து கவலையற்ற வாழ்க்கையை வாழுங்கள். சேமிப்பு வங்கிக் கணக்கில் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து ஆட்டோ டெபிட் வசதி மூலம் பிரீமியம் கழிக்கப்படும்.

ஒருவர் ஒரே ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு மூலம் இந்த திட்டத்தில் சேரத் தகுதியுடையவராவார்.’ என தெரிவித்துள்ளது

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY)

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் மகத்தான பல பலன்களை பெற முடியும். இதன் கீழ், காப்பீடு செய்யப்பட்டவர் விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது முழு ஊனம் ஏற்பட்டாலோ, ரூ.2 லட்சமும், பகுதி ஊனமுற்றோருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

வயது வரம்பு: 18 முதல் 70 வயது வரை உள்ள எவரும் இதில் பாதுகாப்பு பெறலாம்.
பிரீமியம்: இந்த திட்டத்தின் ஆண்டு பிரீமியம் ரூ.12 மட்டுமே.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ், காப்பீடு செய்தவர் மரணித்தால் நாமினிக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும்.

வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

பிரீமியம்: இந்த திட்டத்திற்கும் நீங்கள் ரூ. 330 ஆண்டு பிரீமியம் மட்டுமே செலுத்த வேண்டும்.

இந்த காப்பீடு ஜூன் 1 முதல் மே 31 வரை அதாவது ஒரு வருடம் முழுவதுக்கும் இருக்கும்.

இதற்கு வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

வங்கி கணக்கு நிறுத்தப்பட்டாலோ, அல்லது, பிரிமியம் கணக்கிலிருந்து கழிக்கப்படும் போது, கணக்கில் போதுமான இருப்பு இல்லாமல் இருந்தாலோ, காப்பீடு ரத்துசெய்யப்படலாம்.

இவை இரண்டும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories