பிரதம மந்திரி பீமா யோஜனாவின் கீழ் SBI தரும் சலுகை!

sbi - 2026

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மிகக் குறைந்த தொகையில் பணத்தில் காப்பீட்டு வசதியை வழங்குகிறது.

அரசாங்கத்தின் திட்டங்களான பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (பிஎம்எஸ்பிஒய்) மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பிஎம்ஜெஜெபிஒய்) ஆகியவற்றின் கீழ், எஸ்பிஐ ஆண்டுக்கு வெறும் ரூ.342 முதலீட்டில் ரூ.4 லட்சம் வரை காப்பீட்டை வழங்குகிறது.

இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட எஸ்பிஐ, ‘உங்கள் தேவைக்கு ஏற்ப காப்பீடு செய்து கவலையற்ற வாழ்க்கையை வாழுங்கள். சேமிப்பு வங்கிக் கணக்கில் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து ஆட்டோ டெபிட் வசதி மூலம் பிரீமியம் கழிக்கப்படும்.

ஒருவர் ஒரே ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு மூலம் இந்த திட்டத்தில் சேரத் தகுதியுடையவராவார்.’ என தெரிவித்துள்ளது

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY)

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் மகத்தான பல பலன்களை பெற முடியும். இதன் கீழ், காப்பீடு செய்யப்பட்டவர் விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது முழு ஊனம் ஏற்பட்டாலோ, ரூ.2 லட்சமும், பகுதி ஊனமுற்றோருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

வயது வரம்பு: 18 முதல் 70 வயது வரை உள்ள எவரும் இதில் பாதுகாப்பு பெறலாம்.
பிரீமியம்: இந்த திட்டத்தின் ஆண்டு பிரீமியம் ரூ.12 மட்டுமே.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ், காப்பீடு செய்தவர் மரணித்தால் நாமினிக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும்.

வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

பிரீமியம்: இந்த திட்டத்திற்கும் நீங்கள் ரூ. 330 ஆண்டு பிரீமியம் மட்டுமே செலுத்த வேண்டும்.

இந்த காப்பீடு ஜூன் 1 முதல் மே 31 வரை அதாவது ஒரு வருடம் முழுவதுக்கும் இருக்கும்.

இதற்கு வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

வங்கி கணக்கு நிறுத்தப்பட்டாலோ, அல்லது, பிரிமியம் கணக்கிலிருந்து கழிக்கப்படும் போது, கணக்கில் போதுமான இருப்பு இல்லாமல் இருந்தாலோ, காப்பீடு ரத்துசெய்யப்படலாம்.

இவை இரண்டும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories