தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக
பஞ்சு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது
ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ1 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் பஞ்சு விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் ஜவுளித்துறை கடும் பாதிப்படைந்துள்ளது.
பஞ்சு விலை உயர்வால் குறித்த காலத்தில் ஜவுளி உற்பத்தி செய்ய முடியாததால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்டரை ரத்து செய்துவிட்டதாக ஜவுளிதுறையினர்ஸ வேதனையடைந்துள்ளனர்
பஞ்சு விலை உயர்வால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 30% நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மேலும் 50% நூற்பாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என கோவை,திருப்பூர்,ராஜபாளையம் பகுதி ஜவுளித்துறையினர்,நூற்பாலை உரிமையாளர்கள் வேதனையடைந்துள்ளனர்





