ஆன்லைன் மோசடி: சிக்கமாலிருக்க இத பண்ணுங்க.. எஸ்.பி அட்வைஸ்!

Hacker - 2026

வங்கியிலிருந்து பேசுவதாகக்கூறி ஏமாற்றுவோரிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பி முன் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என மதுரை எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் 2021 மார்ச்சில் துவக்கப்பட்டது.

கூடுதல் எஸ்.பி., மணி, இன்ஸ்பெக்டர் சார்மிங் எஸ்.ஒய்ஸ்லின், போலீசார் பணிபுரிகின்றனர். அலைபேசி காணாமல்போன பல வழக்குகள் மாவட்டத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகின.

ஒரு மாதத்தில் சைபர் கிரைம் மூலம் ரூ. 7லட்சத்து 500 மதிப்புள்ள 40 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. உரியவர்களிடம் எஸ்.பி.,பாஸ்கரன் வழங்கினார்.

இதுவரை ரூ.97 லட்சத்து 4 ஆயிரத்து 850 மதிப்புள்ள 696 அலைபேசிகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
வங்கிகளிலிருந்து பேசுவதாகக்கூறி வங்கி கணக்கை தெரிந்து கொண்டு, நுாதனமாக பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களிடம்ரூ.24 லட்சத்து 95 ஆயிரத்து 168 மீட்கப்பட்டது. உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எஸ்.பி.,கூறியதாவது: வங்கியிலிருந்து பேசுவதாகக்கூறி ஏமாற்றுவோரிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

ரகசிய எண், வங்கி கணக்கு எண், சி.வி.வி., மற்றும் ஓ.டி.பி.,யை முன்பின் தெரியாதவரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும்முதலீட்டு செயலிகள் (Investment App), ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பி முன் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

குறைந்த தொகைக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் செயலிகளிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம். தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளில் பேச வேண்டாம்.

ரிமோட் அக்சஸ் செயலிகளை (Any desk, Team Viewer)பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இதனால் பணத்தை இழந்தால் 1930 இலவச எண், https://www.cybercrime.gov.in இணையதளத்தில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories