December 6, 2025, 5:44 AM
24.9 C
Chennai

ஆன்லைன் மோசடி: சிக்கமாலிருக்க இத பண்ணுங்க.. எஸ்.பி அட்வைஸ்!

Hacker - 2025

வங்கியிலிருந்து பேசுவதாகக்கூறி ஏமாற்றுவோரிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பி முன் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என மதுரை எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் 2021 மார்ச்சில் துவக்கப்பட்டது.

கூடுதல் எஸ்.பி., மணி, இன்ஸ்பெக்டர் சார்மிங் எஸ்.ஒய்ஸ்லின், போலீசார் பணிபுரிகின்றனர். அலைபேசி காணாமல்போன பல வழக்குகள் மாவட்டத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகின.

ஒரு மாதத்தில் சைபர் கிரைம் மூலம் ரூ. 7லட்சத்து 500 மதிப்புள்ள 40 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. உரியவர்களிடம் எஸ்.பி.,பாஸ்கரன் வழங்கினார்.

இதுவரை ரூ.97 லட்சத்து 4 ஆயிரத்து 850 மதிப்புள்ள 696 அலைபேசிகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
வங்கிகளிலிருந்து பேசுவதாகக்கூறி வங்கி கணக்கை தெரிந்து கொண்டு, நுாதனமாக பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களிடம்ரூ.24 லட்சத்து 95 ஆயிரத்து 168 மீட்கப்பட்டது. உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எஸ்.பி.,கூறியதாவது: வங்கியிலிருந்து பேசுவதாகக்கூறி ஏமாற்றுவோரிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

ரகசிய எண், வங்கி கணக்கு எண், சி.வி.வி., மற்றும் ஓ.டி.பி.,யை முன்பின் தெரியாதவரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும்முதலீட்டு செயலிகள் (Investment App), ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பி முன் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

குறைந்த தொகைக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் செயலிகளிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம். தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளில் பேச வேண்டாம்.

ரிமோட் அக்சஸ் செயலிகளை (Any desk, Team Viewer)பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இதனால் பணத்தை இழந்தால் 1930 இலவச எண், https://www.cybercrime.gov.in இணையதளத்தில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories