இந்த நம்பர் கால்களை நம்ப வேண்டாம்.. வாட்ஸ்அப் லாக் அவுட் அபாயம்!

Hacker - 2026

பிறருக்கு பணம் அனுப்பவும், பிறரிடம் இருந்து பணம் பெறவும் நம்மில் பலர் யூபிஐ பேமெண்ட் வசதிகளைப் பயன்படுத்தி வருகிறோம்.

ஏனெனில், பயன்பாட்டிற்கு அது மிகவும் எளிமையாகவும், சௌகரியமானதாகவும் இருக்கிறது. ஒருவருக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு சரியான சில்லறை நம் கையில் இல்லையே என்ற கவலை யூபிஐ பேமெண்ட் முறை காரணமாக மறைந்து விட்டது.

மெசேஜ் அனுப்புவதற்கு பிரபலமானதாக அறியப்படும் வாட்ஸ் அப்-பிலும் கூட யூபிஐ பேமெண்ட் வசதி இருக்கிறது. நமது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கு இந்த வசதி உபயோகமாக இருக்கிறது.

பொதுவாக யூபிஐ பரிவர்த்தனை என்பது மிக எளிமையானது. வெறுமனே ஒரு க்யூ.ஆர். கோடு ஒன்றை ஸ்கேன் செய்து, செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்டு, நீங்கள் அனுப்பி விடலாம். அதே சமயம், வாட்ஸ் அப்-பில் நிதி சார்ந்த மோசடிகள் ஏராளமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளன.

தில்லியைச் சேர்ந்த வாட்ஸ் அப் பயனாளருக்கு அண்மையில் 8420509782 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இன்டர்நெட் இணைப்பு பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் புகார் செய்துள்ளீர்களா என்று அந்த அழைப்பில் பேசியவர் வினவினார்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

இதற்கு அந்த பயனாளர் பதில் அளிக்கையில், “நாங்கள் ஏர்டெல் சேவையை குடும்பத் திட்டத்தின் கீழ் பயன்படுத்தி வருவதால், அதை எங்கள் தந்தை தான் கவனித்துக் கொள்கிறார். எங்கள் அப்பா இப்போது வீட்டில் இல்லை. நீங்கள் பிறகு அழையுங்கள்” என்றார்.

தந்தை வீட்டில் இல்லை என்ற பதிலை பயனாளர் கூறியதும், மறுமுனையில் பேசிய நபர் (மோசடியாளர்) அதை அத்துடன் விட்டுவிடவில்லை. உங்கள் ஃபோனில் இருந்து 4018404975600 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த நம்பருக்கு டயல் செய்தால் ஏர்டெல் சேவை மைய பணியாளர்கள் உங்களை 1 அல்லது 2 நாட்களுக்குள் தொடர்பு கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். இது மோசடி வலை என்பது தெரியாமல் அந்தப் பயனாளர் இதை டயல் செய்து விட்டார்.

மோசடி நபர் குறிப்பிட்ட எண்ணுக்கு அவர் டயல் செய்ததுமே அடுத்த 10 நிமிடங்களில் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

உங்கள் மொபைல் எண் வைத்து புதிய டிவைஸில் வாட்ஸ் அப் பயன்படுத்த வேண்டும் என்றால் பின் நம்பர் குறிப்பிடுங்கள் என்று அந்த செய்தில் கூறப்பட்டிருந்தது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

பயனாளர் அதன்படி செய்து முடித்ததுமே ஃபோன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் வாட்ஸ் அப்-பில் இருந்து லாக் அவுட் ஆகிவிட்டார்.

பாதிக்கப்பட்ட பயனாளர் இதுகுறித்து கூறுகையில், “வாட்ஸ் அப் லாக் அவுட் ஆனதும் எனக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது. 401 என்பது நமது மொபைலுக்கு வரும் கால்களை ஃபார்வார்டு செய்வதற்கானது போல.

அந்த நம்பரை நான் டயல் செய்ததும், அனைத்து இன்கம்மிங் அழைப்புகளும் மோசடியாளரின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது” என்று கூறினார்.

இதற்கிடையே, மோசடி செய்த நபர், பயனாளரின் வாட்ஸ் அப் மூலமாக அவரது நண்பர்கள் 50க்கும் மேற்பட்டோரிடம் பண உதவி கேட்டு மெசேஜ் அனுப்பி விட்டர்.

சிலர் தெரியாமல் பணத்தையும் பரிவர்த்தனை செய்து விட்டனர். இது தெரிய வந்த பயனாளர் இப்போது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்-பில் இரண்டு அடுக்கு ஆதண்டிகேஷன் முறையை நாம் பயன்படுத்த வேண்டும்.

401 மற்றும் அதனுடன் இணைந்த 10 இலக்க எண்களை டயல் செய்யக் கூடாது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

முன்பின் தெரியாத ஃபோன் அழைப்புகள் மூலமாக வரும் லிங்க்குகளை கிளிக் செய்யக் கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories