தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப்-2 தேர்வு 4,012 இடங்களில இன்று தொடங்கி நடைபெற்றது.
குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள 5 ஆயிரத்து 529 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பே ர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 / 2ஏ தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடக்கிறது. 200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு, 300மதிப்பெண்ணுக்கு தேர்வு கணக்கிடப்படும். தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெறுகிறது என்பதால் தமிழக முழுவதும் 323 பறக்கும்படை, 6,400 ஆய்வு குழு, 4,012 வீடியோ குழு அமைத்து தீவிர கண்காணிப்போடு தேர்வு நடைபெற்றது.





