பழைய ரூபாய், காய்ன்ஸ்களுக்கு மாற்று.. RBI முக்கிய அறிவிப்பு!

Published:

old coin - 2026

சென்ற தினங்களில் பழைய நாணயங்களையும், நோட்டுகளையும் வாங்கிவிற்கும் போக்கு தீவிரமடைந்து இருக்கிறது.

இதனை விற்பதற்காக பல ஆப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்கள் இருக்கின்றன. ஆகவே இதுகுறித்து தேவையான தகவல்களை ரிசர்வ்வங்கி வெளியிட்டு உள்ளது.

இதில் பழைய ரூபாய்நோட்டுகள், நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக விற்பனை செய்வதற்கு ஒருசில மோசடியான தளங்கள் மத்திய ரிசர்வ் வங்கியினுடைய பெயர், லோகோவைப் பயன்படுத்துகின்றன என RBI தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி இது பற்றி என்ன கூறியுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இத்தகவலை ரிசர்வ் வங்கி தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

அதாவது “RBI-யின் பெயர் மற்றும் லோகோவை பழையநோட்டுக்கள், காயின்களை விற்கும் பல ஆன்லைன்-ஆப்லைனில் சில தளங்கள் தவறாக பயன்படுத்துவதாக வங்கியின் கவனத்திற்கு வந்துஉள்ளது.

அவ்வாறு தளம் வாயிலாக அதுபோன்ற ரூபாய் நோட்டுகள், நாணயங்களை விற்பதற்கான கட்டணம் மற்றும் கமிஷன்கள் (அ) வரி கேட்கப்படுவதாகவும் தெரியவந்து இருக்கிறது என RBI தெரிவித்துள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

ஆகவே ரிசர்வ் வங்கியானது இதுபோன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு யாரிடமும் கட்டணம் (அ) கமிஷன் எதுவும் கேட்காது எனவும் தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எந்தஒரு நிறுவனத்திற்கோ (அல்லது) நபருக்கோ எவ்விதமான அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியானது இது குறித்து யாரிடமும் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லையென கூறியுள்ளது.

மேலும் யாரிடமும் அதுபோன்ற கட்டணத்தையோ, கமிஷனையோ கேட்பதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுபற்றி RBI கூறியதாவது “இந்திய ரிசர்வ்வங்கியானது எந்தஒரு நிறுவனம் (அ) நபருக்கு எங்கள் சார்பில் எந்தவொரு கட்டணத்தையும் கமிஷனையும் வசூலிக்க அதிகாரத்தை வழங்கவில்லை. இதுபோன்ற போலியான மற்றும் மோசடியான சலுகைகளின் வலையில் சிக்கவேண்டாம் என RBI பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img