திருக்குறளில் திருமண அழைப்பிதழ்! அசத்திய மணப்பெண்ணின் தந்தை!

marriage 8 - 2026

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே மகளின் திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்துடன் இணைத்து அச்சிட்டு பெண்ணின் தந்தை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம், பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ள நிலையில், அடுத்த மாதம் தேதி குறித்துள்ளார்.

thirukural - 2026

தற்போது மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் அச்சடிக்க திட்டமிட்ட அவர், அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என நினைத்துள்ளார்.

இதற்காக அவர் புதிய முயற்சியாக திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்துடன் இணைத்து அச்சடித்து உள்ளார்.

திருக்குறள் புத்தகத்தின் முதல் பக்கத்திலும், கடைசி பக்கத்திலும் திருமண அழைப்பிதழை அச்சடித்து உள்ளார். மேலும் 1330 குறள்களும் விளக்கத்துடன் உள்ளவாறு அச்சடித்து உள்ளார்.

thirukural invitation - 2026

இது குறித்து முனிரத்தினம் கூறுகையில், தன்னால் முடிந்தவரை அனைவரின் இல்லங்களிலும் திருக்குறளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அழைப்பிதழை இவ்வாறு அச்சடித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், திருமண அழைப்பிதழை பார்ப்பவர்கள் திருக்குறளையும் வாசிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தனது மகளின் திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்க உள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories