போனை தாக்கும் வைரஸ்..! பாதுகாப்பது எப்படி?

IPhone SE 3 - 2026

நீங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் என்றால் நீங்கள் உங்கல் போனை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான நேரம் இது.

இணைய வங்கி கடவுச்சொல்லை திருடும் திறன் கொண்ட மிக ஆபத்தான வைரஸை இணையவழி பாதுகாப்பு நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்தனர்.

நிதி சார்ந்த மோசடிகளுக்கு வழிவகுக்கும் இந்த வைரஸ் கடும் சவாலை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கடந்த ஆண்டு இணைய வங்கி வைரஸ் பதிப்பு வெளியாகி இணைய உலகில் கவலையை ஏற்படுத்தியது.

தற்போது அதே வைரஸ் மேம்படுத்தப்பட்டு செயலில் உள்ளது. ERMAC 2.0 எனப்படும் இந்த வைரஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களையே பெரும்பாலும் குறிவைக்கிறது.

மோசடி செயலியை பதிவிறக்குவதன் வாயிலாக இந்த வைரஸ் ஸ்மார்ட்போனுக்குள் நுழைந்து விடுகிறது. மேலும் 43 அனுமதிகளை அந்தச் செயலி கேட்கிறது.

நாம் அனைத்து அனுமதிகளுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டால், மோசடியாளர்கள் நமது சாதனத்தை முழுமையாக கட்டுப்படுத்திவிடுவார்கள்.

நீங்கள் எந்த தளத்திலாவது உள்நுழைய முயன்றால் அந்தத் தளத்துக்குள் ஹேக்கரும் உள்நுழைவார். இதன்மூலம், இணைய வங்கியின் பயனர் விவரம், கடவுச்சொல் ஆகியவற்றை ஹேக்கர் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.

வைரஸிலிருந்து நமது போனை பாதுகாப்பது எப்படி?
கூகுள் பிளே ஸ்டோர், ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட நம்பகமான ஸ்டோர்களிலிருந்து செயலிகளை நாம் பதிவிறக்கம் செய்வது நல்லது.

ஆன்டி-வைரஸ், இணைய பாதுகாப்பு மென்பொருள் ஆகியவை உங்கள் சாதனத்தில் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் கடவுச்சொல் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. நீங்கள் வலிமையான கடவுச்சொல்லை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

விரல் ரேகை, முக அங்கீகாரம் ஆகியவற்றை ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடிந்தால் கட்டாயம் அவற்றை பயன்படுத்துங்கள்.

எஸ்எம்எஸ், இமெயிலில் வரும் லிங்க்குகளை பயன்படுத்தி உள்நுழையாதீர்கள். எந்தவித அனுமதியையும் தருவதற்கு முன் முழுமையாக படித்துப் பாருங்கள்.

உங்கள் ஸ்மார்ட்போனில் புதிய புதுப்பிப்புகள் (Updates) வந்தால் அவற்றை பயன்படுத்தி போனை அப்டேட் செய்யுங்கள். இவ்வாறாக நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

பஞ்சாங்கம் – மார்ச் 04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

Topics

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

பஞ்சாங்கம் – மார்ச் 04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில்...

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

T20 WC 2026: அரையிறுதிப் போட்டிகள் எப்படி?

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்பர் 8 ஆட்டங்கள் 02.03.2026முனைவர்...

பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

Entertainment News

Popular Categories