தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் ரூ.86,912 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்தது.
இதில் தமிழகத்திற்கு ரூ.9062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அன்மையில் சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் ஜிஎஸ்டி தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும் என கூறியிருந்தார்





