சாலையில் பறந்த பணமழை.. அள்ளி எடுத்த மக்கள்..!

Published:

money rain - 2026

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு அதி விரைவு பேருந்து ஒன்று சென்றுள்ளது.

அந்தப் பேருந்தில் இருந்து திடீரென பணத் தாள்கள் பறந்து சாலையில் சிதறின. அப்போது சாலையில் இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

பின்னர் முதலில் ஒருவர் வாகனத்தை நிறுத்திப் பார்த்த பிறகுதான் உண்மையிலேயே சாலை முழுவதும் பணமாக சிதறிக் கிடப்பது புரிய வந்தது.

உடனடியாக அவர் பணத்தைப் பொறுக்க ஆரம்பித்ததும், மற்றவர்களும் வேகவேகமாக பணத்தைப் பொறுங்க ஆரம்பித்தனர்.

சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் என பலரும் போட்டிப் போட்டுக்கொண்டு சிதறிக் கிடந்த பணத் தாள்களைப் பொறுக்கினர்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கேரள அரசு விரைவுப் பேருந்தில் இருந்த நடத்துனரின் பையில் இருந்து மொத்தப் பணமும் சிதறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 15,000 ரூபாய் காற்றில் பறந்து சாலையில் விழுந்துள்ளது. சாலையில் சிதறிக் கிடந்த பணத்தை பொதுமக்கள் அள்ளிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img