December 24, 2025, 7:46 AM
23 C
Chennai

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் மூழ்கி தம்பதியர் தற்கொலை..

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் வயதான தம்பதி உயிரிழந்த நிலையில் கடலில் மிதந்து வந்ததை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் துணியால் தங்களது உடலை கட்டிக்கொண்டு கடலில் ஆழமான பகுதிக்கு சென்று தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் புனித நீராடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வயதான முதியவர் மற்றும் மூதாட்டி ஆகிய இருவர் கடலில் பிணமாக மிதந்தனர். அவர்கள் இருவரது உடலும் இடுப்பு பகுதி துணியால் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. இதனை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முதியவர் மற்றும் மூதாட்டி கடலில் பிணமாக மிதப்பது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

கடலில் மிதந்த முதியவர் மற்றும் மூதாட்டி பிணங்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கைபற்றப்பட்ட ஆதார் அட்டை மூலம் இருவரும் கோவை மாவட்டம், பொன்னாபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் ( 62), தனலட்சுமி (59) என தெரியவந்தது. கடந்த 3-ந் தேதி கோவிந்தராஜூம் அவரது மனைவியும் ராமேஸ்வரம் வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் கோவிந்தராஜூம் அவரது மனைவியும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதுபற்றி தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் தான் இருவரும் துணியால் தங்களது உடலை கட்டிக்கொண்டு கடலில் ஆழமான பகுதிக்கு சென்று தற்கொலை செய்து உள்ளனர். மேலும் தங்களது உறவினர்களுக்கு அனுப்பிய தகவலில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தங்களது மகன் பெயரில் அறக்கட்டளை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். அறக்கட்டளை அமைக்க தங்களது சொத்தை விற்று விடுமாறும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி கோவை மாவட்ட போலீசாருக்கு ராமேசுவரம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கோவிந்தராஜ் உறவினர்களுக்கு கணவன்-மனைவி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 17 1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – டிச.24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – டிச.24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பரமன் அளித்த பகவத் கீதை(4): கைவர்தக: கேசவ:

அப்படிப்பட்ட இந்த யுத்தம் என்கிற ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

When a Child Wept and Music Stood Still: A December Twilight at Narada Gana Sabha

A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder

சபரிமலை வருபவர்களுக்கு இன்று முதல் பாரம்பரிய ‘சத்யா’ உணவு தொடக்கம்!

ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தின் பாரம்பரிய உணவாக மதியம் சத்யா பரிமாறத் தொடங்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories