திருப்பதியில் மாநகராட்சி ஊழியர்கள் இருவர் விஷவாயு தாக்கி பலி..

திருப்பதியில் மாநகராட்சி ஊழியர்கள் இருவர் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி பலியாகியுள்ளனர்.திருப்பதி மாநகராட்சி என்ஜினியர்கள் 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருப்பதி வைகுண்டபுரம், தும்மலகுண்டா சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் செய்தனர். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் ஆறுமுகம் (வயது 22), மகேஷ் (35) ஆகியோர் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் ஜெட் வாகனத்தை அப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பாதாள சாக்கடையில் குழாயை செலுத்தி அடைப்பை அகற்ற முயன்றனர். ஆனால் வாகனத்தின் மூலம் அடைப்பை அகற்ற முடியவில்லை. இதையடுத்து மகேஷ் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை அகற்ற முயன்றார். பாதாள சாக்கடைக்குள் இறங்கிய மகேஷ் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் பாதாள சாக்கடைக்குள் இறங்கினார். அவரும் வெளியே வரவில்லை. இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் லட்சன்னா(22) என்பவரும் பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது விஷவாயு அவரையும் தாக்கியது. சுதாரித்துக்கொண்ட லட்சன்னா மூச்சை பிடித்துக்கொண்டு மேலே வந்து கத்தி கூச்சலிட்டார். அருகிலிருந்தவர்கள் லட்சன்னாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதாள சாக்கடையில் இறங்கி பார்த்தபோது அங்கு விஷ வாயு தாக்கி மகேஷ், ஆறுமுகம் இறந்து கிடந்தனர். 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக திருப்பதி மாநகராட்சி என்ஜினியர்கள் 2 பேர் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

images 5 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories