யஷ்வந்த் சின்ஹா மனு தாக்கல் செய்தபோது 8 கட்சிகளின் பிரதிநிதிகள் புறக்கணிப்பு..

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா மனு தாக்கல் செய்தபோது 8 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்காதது கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் யஷ்வந்த் சின்ஹா மனுதாக்கல் செய்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, திமுக சார்பில் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால், மாயாவதியின் பகுஜன் சமாஜ், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சி வரிசையைச் சேர்ந்த 8 கட்சிகளின் பிரதிநிதிகள் யஷ்வந்த் சின்ஹாவின் வேட்பு மனு தாக்கலின்போது கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் தங்களுடன் ஆலோசிக்கவில்லை என்பதால் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிக்கப் போவதாக மாயாவதியும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் முர்முவுக்கு ஆதரவு என்று ஒடிசா முதல்வரும் பிஜூ ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக்கும் அறிவித்துள்ளனர்.

இந்த 8 கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கவில்லை. குறிப்பாக, சின்ஹாவின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, பழங்குடியினர் நலனுக்கு ஆதரவான கட்சி. ஜார்க்கண்ட் ஆளுநராக பணியாற்றியுள்ள முர்முவும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். எனவே, முர்முவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரிக்கும் என்று தெரிகிறது. ஏற்கெனவே பாஜகவில் இருந்த யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியில் இருந்து விலகி சிறிது காலம் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தார். பின்னர், அங்கிருந்தும் விலகினார். யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க ஆம் ஆத்மி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது யஷ்வந்த் சின்ஹாவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

819819 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories