நாட்டில் ஏற்றுமதி 3 லட்சம் கோடியாக உயர்வு- நல்ல செய்தியாக இருக்கிறது-ஜி.கே.வாசன்

தி மு க தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக விருதுநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

01 - 2026

காமராஜர் பிறந்தநாள் விழா வருகிற 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது விழா கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விருதுநகரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மிகப்பிரமாண்டமாக மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் ஆக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழலை காரணம் காட்டி வருடத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பட்டாசு தொழிலை முடக்குவதை கைவிட வேண்டும். சரவெடி தயாரிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசுவதற்காக இருந்தோம். இந்த முறை சரியாக பாராளுமன்றம் நடைபெறாததால் அதைப்பற்றி பேச முடியவில்லை. பட்டாசு ஆலைகளை ஆய்வு என்ற பெயரில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள். பட்டாசு ஆலைகளை முறைப்படுத்த வேண்டும் சீர்படுத்த வேண்டும் என்றால் அதற்கான காலக்கெடுவை அவர்களுக்கு அரசு வழங்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு என்ற பெயரில் உரிமையாளர்களிடம் எந்தவிதத்திலும் சங்கடமும் ஏற்படுத்தக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு ஆணையம் பட்டாசு தொழிலில் கூடுதல் கவனம் காட்டி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நாட்டில் ஏற்றுமதி 3 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்திருப்பது கொரோனாவிற்கு பிறகான நல்ல செய்தியாக இருக்கிறது. கொரோனா தற்போது பல இடங்களில் பரவத் துவங்கி இருக்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நகரம், கிராமம் போன்ற பகுதிகளில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க அரசு விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படைகள் கைது செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது தொடர்ந்து மீனவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதை இலங்கை அரசு வழக்கமாக கொண்டு உள்ளது. இலங்கை அரசு இதை உடனடியாக நிறுத்த வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கையுடன் பேசி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை காணாமல் போய் மீண்டும் கிடைத்திருக்கிறது. கிடைத்திருப்பது நல்ல செய்தியாக இருந்தாலும் பல இடங்களில் இதே போல் நடந்து வருகிறது. அதை அரசு கண்காணித்து இதேபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மதத்தைப் பற்றியும் மத உணர்வுகளை பற்றியும் எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் தவறாக சித்தரிக்க கூடாது பரப்பவும் கூடாது.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வை பாஜக மிகத் தெளிவாக செய்திருக்கிறது. ஒரு பழங்குடியினப் பெண்ணை தேர்வு செய்திருக்கிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்களுக்கு வாக்களித்து அவர்களை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட வேண்டும் அது முறையாக இல்லை என்கின்ற அச்சம் மக்களிடம் இருக்கிறது. அதை முறையாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்கவேண்டும்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய ஒரு குழு அமைத்து அதனை தடை செய்யாமல் காலம் தாழ்த்துவது சரியல்ல. உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும் என்பது சாதாரண மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆன்லைன் ரம்மி தொடர தொடர ஏழை எளிய மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக இருக்கிறது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தவறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் இதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களை ஏமாற்றி வருகிறது. முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக இருந்து வருகிறது. மேலும் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிய அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது. மேலும் வருடம் ஒரு முறை உயர்த்துவோம் என கூறியுள்ளது இது மக்களின் விரோத போக்கு செயல் ஆகும்

விருதுநகர் எம்எஸ்எம்இ விருது வாங்கி இருக்கிறது. எம்எஸ்எம்இ யில் அதிகப்பங்கு மத்திய அரசு உடையது. கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. அந்த சிறு குறு தொழில் மேலும் முன்னேறுவதற்காக மத்திய அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என எம்எஸ்எம்இ யில் பல திட்டங்களை தந்தது அதன் அடிப்படையில் சிறு குறு தொழில் முதல் இடத்தை பெற்றிருக்கிறது.

மேலும் தமிழகத்தில் கல்வியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஒரே தலைவர் கல்விக்கண் திறந்த காமராஜர் வருங்காலங்களிலே மக்கள் காமராஜரின் ஆட்சியை நினைத்து பார்த்து சிந்தித்து அதற்கு தகுந்தவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories