சபரிமலை ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க கேரளா அரசு முடிவு..

உலகப்புகழ் பெற்ற சபரிமலையில் தரிசிக்க கேரள காவல்துறை மூலம் நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். இதனால் கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவது வழக்கம். இதனை தவிர்க்கவும், பக்தர்கள் வசதிக்காகவும் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முன்பதிவு செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்யலாம் என்பதால் பலரும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் பெற்று வருகின்றனர். இந்த ஆன்லைன் முன்பதிவை கேரள போலீசார் செயல்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவை தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விஷயத்தில் உரிய முடிவை எடுக்கும்படி கேரள அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு கூட்டம், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தியது. இதன்முடிவில் சபரிமலை ஆன்லைன் முன்பதிவை, தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்ப ட்டது.

இதற்காக தேவசம் போர்டு சார்பில் சிறப்பு தகவல் தொழில்நுட்பக் குழு அமைக்கவும் அந்தக் குழுவுக்கு தேவையான உதவிகளை கேரள போலீசார் செய்யவேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் சமயங்களில் கேரளாவில் 12 இடங்களில் ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்படும். அதனையும், பம்பை, நிலக்கல் பகுதிகளில் செயல்படும் உடனடி முன்பதிவு மையங்களையும் தேவசம் போர்டிடம் ஒப்படைக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

samayam tamil 2 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories