மாமல்லபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..

1736405 players - 2026

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் வெளிநாட்டு வீரர்கள் வருகை தந்துள்ளதால் போட்டி நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை நடைபெறுகிறது. 29-ந்தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக 187 வெளிநாடுகளில் இருந்து 2500-க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக பிரமாண்டமான அரங்கம் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் வருகை தந்துள்ளதால் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போட்டி நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 14 நாட்கள் தொடர்ச்சியாக செஸ் போட்டிகள் நடைபெறுவதையொட்டி சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மத்திய போலீஸ் படையுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக திருவாரூர், தஞ்சை, சேலம், நாகர்கோவில், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதல் போலீசாரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

காவலர்கள் தங்குவதற்கு வசதியாக 20 திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பதற்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடம் அருகே 6 ஏக்கரில் வாகன நிறுத்துமிடமும் தயார் செய்யப்பட்டு உள்ளது. அங்கு தற்காலிக கழிவறைகளும், 10 நடமாடும் கழிவறை வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் தங்கும் சொகுசு விடுதிகளை சுற்றி வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாமல்லபுரம் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் தினமும் சோதனை நடைபெற்று வருகிறது. சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை உள்ளூர் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

அடுத்த 2 வாரங்களும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!
1736422 carlsen - 2026

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது செஸ் ஒலிம்பியாட் மூலம் இதை சொல்லலாம் என உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் மாமல்லபுரத்தில் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கிறார். அவர் தலைமையிலான நார்வே அணி 3-வது தரவரிசையில் இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடும் இந்திய அணிகள் மிகவும் பலம் பெற்றதாக இருக்கிறது. வியக்கத்தக்க வீரர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் இரண்டு அணிகளும் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். உலக செஸ்சின் முக்கிய மையமாக தற்போது தமிழ்நாடு அல்லது சென்னை திகழ்கிறது. செஸ் ஒலிம்பியாட் மூலம் இதை சொல்லலாம். இதனால் தான் நானும் இங்கு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Entertainment News

Popular Categories