கேரளாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானை..

KL elephant flood edi - 2026

கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திரிச்சூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை அடித்துச்செல்லப்பட்டது பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளியிலுள்ள சாலக்குடி ஆற்றில் அதிக அளவிலான வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், யானைக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டதாக வனத் துறையினரும் உள்ளூர் மக்களும் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திரிச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மாவட்டத்திலுள்ள பெருங்கள்குத்து அணை திறந்துவிடப்பட்டுள்ளதால், சாலக்குடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஆற்றின் குறுக்கே வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. ஆற்றின் நடுவே உள்ள சிறிய மேடான பகுதியில், மரங்களையொட்டி பலமணி நேரம் யானை நின்றுள்ளது. பின்னர் தண்ணீரில் வேகம் குறைவாகவுள்ள பகுதியை நோக்கிச் செல்ல முயன்ற யானை, அங்குமிங்கும் வெள்ளத்தில் திணறியது.  

அதிரப்பள்ளிக்கு வந்த வனம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள், அதிகப்படியான வெள்ளத்தால் யானையை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. 

எனினும், சிலமணி நேரத்திற்கு பிறகு, வெள்ளப் பெருக்கு குறைவாகவுள்ள காட்டுப்பகுதியையொட்டிய கரைக்கு யானை சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories