
ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் பெண், சிறுமி சடலம் மிதந்தது, இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யார் அவர்கள் என போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் 35 வயது மதிப்புடைய சேலை சாக்கெட் அணிந்த சிவந்த நிறம் உள்ள ஒரு பெண்ணின் சடலமும், 12 வயது மதிப்புள்ள சுடிதார் துப்பட்டா அணிந்த சிறுமியின் பிணமும் மிதந்து கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக விரைந்து சென்று தீயணைப்பு படையினர் குளத்தில் மிதந்து கிடந்த இரண்டு பெண்களின் சடலங்களை மீட்டனர் .
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணமாக கிடந்தவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரும் தாய் மகளா இவர்கள் குளத்தில் பிணமாக மிதப்பதற்கு காரணம் என்ன தற்கொலை செய்து கொண்டார்களா வேறு யாரேனும் இவர்களை கொலை செய்து குளத்தில் வீசி உள்ளனரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் பிணங்கள் மிதப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட இரண்டு பெண் பிணங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிண பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பின்னர்போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் திருமுக்குளத்தில் பிணமாக கிடந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மா பட்டியை சேர்ந்த அங்காள ஈஸ்வரி மற்றும் அவரது மகள் மகாலட்சுமி என்பது தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.





