December 6, 2025, 9:45 PM
25.6 C
Chennai

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் மிதந்த பெண், சிறுமி சடலங்கள்..

images 98 - 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் பெண், சிறுமி சடலம் மிதந்தது, இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யார் அவர்கள் என போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் 35 வயது மதிப்புடைய சேலை சாக்கெட் அணிந்த சிவந்த நிறம் உள்ள ஒரு பெண்ணின் சடலமும், 12 வயது மதிப்புள்ள சுடிதார் துப்பட்டா அணிந்த சிறுமியின் பிணமும் மிதந்து கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக விரைந்து சென்று தீயணைப்பு படையினர் குளத்தில் மிதந்து கிடந்த இரண்டு பெண்களின் சடலங்களை மீட்டனர் .

தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணமாக கிடந்தவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரும் தாய் மகளா இவர்கள் குளத்தில் பிணமாக மிதப்பதற்கு காரணம் என்ன தற்கொலை செய்து கொண்டார்களா வேறு யாரேனும் இவர்களை கொலை செய்து குளத்தில் வீசி உள்ளனரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் பிணங்கள் மிதப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட இரண்டு பெண் பிணங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிண பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர்போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் திருமுக்குளத்தில் பிணமாக கிடந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மா பட்டியை சேர்ந்த அங்காள ஈஸ்வரி மற்றும் அவரது மகள் மகாலட்சுமி என்பது தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories