காஷ்மீா் பண்டிட்டை கொலைசெய்தவரின் வீடு பறிமுதல்: தந்தை, சகோதரர்கள் கைது..

vikatan 2022 05 f43c7ff0 3932 4786 9481 6962d89a944c WhatsApp Image 2022 05 13 at 3 14 27 PM - 2026
பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட `காஷ்மீர் பண்டிட்’

ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த ஒருவரைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதியின் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அவரது தந்தை மற்றும் 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் பலியானாா். தாக்குதலில் காயமடைந்த அவரின் சகோதரா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.இந்த தாக்குதலை நடத்திய அடில் வானி என்ற பயங்கரவாதி, தனது வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், நள்ளிரவில் தேடுதல் வேட்டையின் போது, பாதுகாப்புப் படையினர் மீது எதிர்தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார். அவரது வீட்டிலிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறுபான்மையின பண்டிட் சமூகத்தினா், வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஆகியோரைக் குறிவைத்து தாக்கும் சம்பவங்களை பயங்கரவாதிகள் சில மாதங்களுக்கு முன் நிகழ்த்திவந்தனா். அதையடுத்து, ஜம்மு-காஷ்மீா் முழுவதும் காவல் துறையினரும் பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினா். அதனால் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் சற்று குறைந்திருந்தன.

ALSO READ:  விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையிலும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் பொதுமக்கள் மீதான தாக்குதலை பயங்கரவாதிகள் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை காவலா் ஒருவா் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டாா். பந்திபோராவில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிகாரைச் சோ்ந்த தொழிலாளா் பலியானாா். சுதந்திர தினத்தின்போது பட்காம், ஸ்ரீநகா் மாவட்டங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்தவா் கொல்லப்பட்டாா். காயமடைந்த அவரின் சகோதரா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா, பாஜக செய்தித் தொடா்பாளா் அல்தாஃப் தாக்குா் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். பயங்கரவாதிகளின் தாக்குதலில் நடப்பாண்டில் மட்டும் 15 பொதுமக்களும் 6 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனா்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

பண்டிட் சமூகத்தினா் மீதான தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறுமாறு அச்சமூகத்தினரை காஷ்மீா் பண்டிட் கூட்டமைப்பு (கேபிஎஸ்எஸ்) கோரியுள்ளது. இது தொடா்பாக அக்கூட்டமைப்பின் தலைவா் சஞ்சய் டிக்கூ கூறுகையில், ‘‘கடந்த 32 ஆண்டுகளாகவே இது நடைபெற்று வருகிறது. சிறுபான்மையினருக்கு முக்கியமாக காஷ்மீா் பண்டிட் சமூகத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது.

சுதந்திர தினப் பேரணியின்போதும் அமா்நாத் யாத்திரையின்போதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவில்லை. காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூட பாதுகாப்பாக இருக்கிறாா்கள். ஆனால், பண்டிட் சமூகத்தினருக்குப் பாதுகாப்பில்லை. பண்டிட் சமூகத்தினரை வெளியேறுமாறு கூறுவதற்காக அரசு சிறையில் அடைத்தாலும் அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’’ என்றாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Entertainment News

Popular Categories