சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இருந்து தே.மு.தி.க., உறுப்பினர்கள் அனைவரும் அவைத்தலைவர் உத்தரவின் பேரில் இன்று வெளியேற்றப்பட்டனர். சட்டப் பேரவையில் இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜ் சிட்டிசன் என்ற வார்த்தையை ‘குடிமகன்’ என்று மொழிபெயர்த்துக் கூறியது தொடர்பாக தே.மு.தி.க., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவி்த்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவையில் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு அவைத் தலைவர் உத்தரவிட்டார். அதை அடுத்து தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டார். பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு ஆவணங்களைத் தூக்கி வீசியதாகவும, அவைக் காவலர்களைத் தாக்கியதாகவும் தே.மு.தி.க., உறுப்பினர்கள் மீது புகார் கூறப்பட்டது.
To Read this news article in other Bharathiya Languages
பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றம்: தொடர் முழுதும் சஸ்பெண்ட்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari