சென்னை: நடப்பு கூட்டத் தொடர் முழுவதிலும் பங்கேற்க தேமுதிக., உறுப்பினர்களுக்கு தடை விதித்து பேரவைத் தலைவர் இட்ட உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, தமிழக சட்ட மன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரின் பங்கேற்க இயலாதபடி, கூட்டத்தொடர் முழுவதும் தே.மு.தி.க. உறுப்பினர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அக்கட்சியின் உறுப்பினர்கள் மோகன்ராஜ், சந்திரகுமார் ஆகியோர் அடுத்த கூட்டத் தொடரில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, தே.மு.தி.க., உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு ஆவணங்களைத் தூக்கி வீசியதாகவும, அவைக் காவலர்களைத் தாக்கியதாகவும் தே.மு.தி.க., உறுப்பினர்கள் மீது புகார் கூறப்பட்டது.
தேமுதிக.,வினர் சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய ஸ்டாலின் கோரிக்கை
Popular Categories


