கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.4கிலோ தங்கம் பறிமுதல்..

images 97 1 - 2026

கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 3.4கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு கத்தார் நாட்டின் தோஹாவில் வரும் விமானத்தில் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விமான நிலைய ஊழியர்களுடன் இணைந்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று விமான நிலையத்தில் சோதனை நடத்தினர்.

கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து நேற்று கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளுடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் அந்த 2 பயணிகளும் தங்கள் உடலில் மறைத்து மொத்தம் 3.4 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 3.4 கிலோ தங்கத்தை பட்டை வடிவில் அமைத்து அதை 2 பயணிகளும் தங்கள் உடலில் கட்டிக்கொண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் 2 பயணிகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பயணிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3.4 கிலோ தங்கத்தின் மதிப்பு சுமார் 1 கோடியே 70 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தங்கத்தை கடத்தி வந்த 2 பயணிகளும் கசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அதிகாரிகள் பயணிகளின் பெயர்களை வெளியிடவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories