ஸ்ரீபெரும்புதூரில் விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி..

sewage tank - 2026
தொழிலாளர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி

காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூரில் விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்துகொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியுள்ளது. தொழிலாளர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி சுமார் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது .

ஸ்ரீபெரும்புதூர், தேசிய நெடுஞ்சாலையில் சத்தியன் கிராண்ட் சொகுசு விடுதி உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இன்று காலை 5 தொழிலாளர்கள் வந்தனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்துகொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியது. இதில் அருகில் நின்று கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் 3 தொழிலாளர்களும் கழிவுநீர் தொட்டிக்குள் மூழ்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகத்தினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தொழிலாளர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி சுமார் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதனால் பலியான 3 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

பலியான 3 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் (50), திருமலை (18), நவீன் (30) என்பது தெரிய வந்துள்ளது. கழிவுநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பாதுகாப்பாக முழுவதும் வெளியேற்றி உடல்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். உரிய பாதுகாப்பு இன்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ததால் 3 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories