சபரிமலையில் பெண்கள் வழிபடு முறை- மாற்றம் கொண்டு வர தேவை இல்லை-சிபிஎம்- ஜி.சுதாகரன்..

screenshot17741 1659620912 - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபடும் முறையில் மாற்றம் கொண்டு வர தேவை இல்லை என மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகி ஜி.சுதாகரன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகிகள் பலரும் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயது 50-ல் இருந்து இன்னும் குறைக்கப்படவில்லை.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந் தேதி) நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜைக்கான விழா தொடங்குகிறது. இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகிகள் பலரும் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்தனர். அப்போது மந்திரியாக இருந்த ஜி.சுதாகரனும் இந்த கருத்தை ஆதரித்து கருத்து கூறியிருந்தார்.

இந்த நிலையில் இப்போது மீண்டும் மண்டல பூஜை தொடங்க இருக்கும் நிலையில் மார்க்சிஸ்டு மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜி.சுதாகரன், நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயது 50-ல் இருந்து இன்னும் குறைக்கப்படவில்லை. சபரிமலை ஐயப்பன் நித்திய பிரமச்சாரி என கருதப்படுவதால் 50 வயதுக்கு குறைவான பெண்கள் இக்கோவிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறையை அனைவரும் மதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் மாற்றம் கொண்டு வர தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார். மந்திரியாக இருந்தபோது இக்கருத்துக்கு எதிராக பேசிய ஜி.சுதாகரன் இப்போது அந்த கருத்தை மாற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories