தக்காளி-வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி..

ஒட்டன்சத்திரம் | தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.14-க்கு விற்பனையாகிறது.மதுரை நெல்லை பகுதியில் நேற்று ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ20க்கு விற்றது இன்று கிலோ15ஆக சரிவடைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழநி, வடமதுரை, அய்யலூர், சாணார்பட்டி, கோபால்பட்டி பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளன. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கடந்த சில தினங்களாக வரத்து அதிகரித்து வருகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், கேரளாவிற்கும் அதிகளவில் விற்பனைக்கு செல்கிறது. இருப்பினும் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.30 வரை விற்ற நிலையில் தற்போது விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.14 வரை விற்பனையாகிறது. விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் விவசாயிகள் கூறுகையில், ”முதல் ரக தக்காளி ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.7 வரைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். வியாபாரிகள் போக்குவரத்து செலவு உள்ளிட்வைகளை சேர்ந்து மார்க்கெட்டில் ஒரு பெட்டி (14 கிலோ) ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்கின்றனர்”, என்றனர்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் கூறுகையில், ”ஒரு பெட்டி (14 கிலோ) ரூ.300 முதல் ரூ.450 வரைக்கு விற்பனையானால் தான் கட்டுப்படியாகும். தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. மேலும் வரத்து அதிகரித்தால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது”, என்றனர்.

இந்தநிலையில் மதுரை நெல்லை பகுதியில் நேற்று ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ20க்கு விற்றது இன்று கிலோ15ஆக சரிவடைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories