மருந்துகளை அதிகமாக வாங்கி காலாவதியாக்கிய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு..

images 61 2 - 2026

மருந்துகளை தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதியாக்கி, அரசுக்கு ரூ.27 கோடி இழப்பு ஏற்படுத்திய முன்னாள் உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் இன்பசேகர் உள்ளிட்ட 4 உயர் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

2017-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 65 இஎஸ்ஐ மையங்களுக்கு தேவையான மருந்துகள் பற்றிய விவரத்தை குறித்து மதுரை மண்டல மருத்துவ அதிகாரி கல்யாணி என்பவர் ரூ.13 கோடி அளவிலான மருந்துகள் தேவை என பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால், ரூ.13 கோடி மருந்துகளை அதற்குரிய விலையில் வாங்காமல் ரூ.40 கோடி அளவிற்கு தேவை என போலி ஆவணங்கள் தயாரித்து 4 மருத்துவத்துறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பணிபுரிந்த முன்னாள் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் இன்பசேகர்,  மதுரை மண்டல மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், அமர்நாத் ஆகியோர் ரூ.13 கோடி ரூபாய்க்கு மருந்துகள் வாங்கி கொடுக்காமல் தனியார் மருத்துவ கம்பெனிகளிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக தேவையில்லாமல் அதிகளவில் மருந்துகளை வாங்கி மோசடி செய்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதற்கு உடந்தையாக இல்லாத கல்யாணி என்பவரை பணியிடை மாற்றம் செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கல்யாணி என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் அவரது பணியிடை மாற்றத்தை ரத்து செய்து, அவர் மீதான குற்றச்சாட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் விளைவாக 2017-2018-ல் மதுரை மண்டலத்துக்கு ரூ.13 கோடிக்கு மருந்துகளை வாங்கவதற்கு பதில் ரூ.40 கோடிக்கு மருந்துகள் வாங்க போலி ஆவணம் தயாரித்தது அம்பலமாகியது.

தேவைக்கு அதிகமாக 3 மடங்கு அதிகம் வாங்கப்பட்ட மருந்துகள் பயன்பாடு இல்லாமல் காலாவதியானது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிக அளவில் வாங்கப்பட்ட மருந்துகள் வீணானதால் அரசுக்கு ரூ.27.16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மருந்துளை தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதியாக்கி, அரசுக்கு ரூ.27 கோடி இழப்பு ஏற்படுத்திய முன்னாள் உயர் அதிகாரிகள் மீது ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories