பாகிஸ்தான் தோற்று வாட்ஸ்-அப் கணிப்பை வெற்று வதந்தி ஆக்கியுள்ளது!

உலகக் கோப்பை போட்டிகள் குறித்து நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு வதந்தி வெளியானது. அது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளதில், இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்த 9 தகவல்களும் உண்மையாகவே நடந்துள்ளது. எனவே இந்தக் கருத்து கணிப்பில் இருப்பது போல் போட்டி முடிவுகள் அனைத்தும் அமைந்தால் அது, ஐ.சி.சி.க்கு மிகப் பெரிய தலைவலியாகவே அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப் பட்டது. ஆனால், இன்றைய போட்டியில் தோற்று, பாகிஸ்தான் அணி ஐ.சி.சி.க்கு உருவாகவுள்ள தலைவலியை போக்கி விட்டது. வாட்ஸ்-அப் செய்தி வெறும் வதந்திதான் என்பதை அது நிரூபித்துவிட்டது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெல்லும் என்றும், மேற்கு இந்தியத் தீவுகள் தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், படுதோல்வி அடைந்து பாகிஸ்தான் அதனை பொய்யாக்கிவிட்டது. முன்னதாக, நேற்று வெளியான வாட்ஸ் அப் செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்கும், என்றும் உலகக் கோப்பை போட்டிகள் ஏற்கெனவே ஃபிக்ஸ் செய்யப் பட்டுவிட்டதாகவும் வாட்ஸ்-அப்பில் உலவும் செய்திகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்திய அணி தனது முதல் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை வென்றது. பிறகு நாளை ஞாயிறு தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய அணி அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்கும் என வாட்ஸ்-அப்பில் வதந்தி உலா வருகிறது. அதில், இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன. மேட்ஸ் ஃபிக்ஸிங் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் சரி, முன்னாள் சாம்பியன்களுக்கும் சரி.. இந்த உலகக் கோப்பை கிடைக்காது. தென் ஆப்பிரிக்கா அணிதான் உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஞாயிறு நாளைய போட்டியில் இந்தியா தோற்குமாம். ஜிம்பாப்வே அணியும் இந்திய அணியைத் தோற்கடிக்குமாம். இவ்வாறு அடுத்து நடைபெறும்அனைத்து கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் ஒரு முடிவை அது வெளியிட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தகுதி பெற்று மோதும் என்றும், அதில், தென்ஆப்பிரிக்கா வெல்லும் என்றும் வதந்தி பரவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

Topics

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Entertainment News

Popular Categories