திமுக.,வை எதிர்த்தே அதிமுக.,வை எம்ஜிஆர்., தொடங்கினார் என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்!

madurai udayakumar - 2026

மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் கோயில் ஆகம விதிமுறைகளை மீறினால் திமுகவிற்கு மக்களும், கடவுளும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்; திமுகவை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார் என்பது ஸ்டாலினுக்கு நன்றாக தெரியும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் பேட்டி அளித்தார்.

கழக அம்மா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனை ,முன்னாள் முதலமைச்சர், எடப்பாடியார் நடத்தி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, திருமண விழா அழைப்பிதழை, மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில், ஜனகைநாராயண பெருமாள் கோவில், குருவித்துறையில் உள்ள, சித்திர வல்லபவபெருமாள் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு, திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கும், அதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றை கழகச் செயலாளர் கொரியர் கணேசன், சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, பேரூர் கழகச் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

ஆர்.பி..உதயகுமார் கூறியதாவது: வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி புரட்சித்தலைவர் பிறந்த நாளை முன்னிட்டும், புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டும், கழக 51வதுஆண்டு பொன்விழாவை முன்னிட்டும்,கழக அம்மா பேரவையின் சார்பில் எனது மகள் திருமணம் உட்பட ,51 திருக்கல்யாணம் டி.குன்னத்தூர் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.

இதனை ,முன்னாள் முதலமைச்சர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் திருமணத்தை நடத்தி வைக்கிறார். தேர்தலை மையமாக வைத்து கட்சிகள் உள்ளன.

ஆனால் அதிமுகவோ மக்கள் நலனை மையக்கத்தாக கொண்டு ,ஆளுங்கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும் மக்களுக்காகஉழைத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில், ஆண்டாண்டு காலமாக வரலாற்று பதிவாக ஆகம விதிகளை கடைபிடிக்கபபட்டு வருகிறது. 

தற்போது, ஆகம விதிகளை மீறும்போது, மக்கள் மனமும் குமுறும், தெய்வம் மனமும் குமுறும் . ஆகம விதிமுறை மீறல் என்பது மக்கள் மனம் வருததப்படும்,தெய்வங்கள் மனமும் வருத்தப்படும். ,நம்முடைய நம்பிக்கையை சீர்குழைக்கும் வகையில் ஆகம விதியை மீறினால், அரசுக்கு மக்களும், கடவுளும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
புரட்சித்தலைவர் அதிக நாட்கள் திமுகவில் இருந்தார் என்று  ஸ்டாலின் பேசியுள்ளார். திராவிட கொள்கைகளை மறந்து, ஜனநாயக கொள்களை மறந்து, குடும்ப ஆட்சியை திமுக நடத்தியது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

ஏழை,எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அண்ணாவின் கொள்கைகளை உருவாக்கி, அண்ணாவின் பெயரில் அதிமுகவை ஆரம்பித்தார் புரட்சித்தலைவர்
இருக்கும்பொழுது கருணாநிதியை கோட்டை பக்கம் கூட வர விடாமல் மக்கள் தடுத்தனர். அதையெல்லாம் மறைத்துவிட்டு முதலமைச்சர், தனக்குள்ள அதிகாரத்தை வைத்து தனது சொல்லை வலிமையாக்கி உள்ளார். திமுகவை எதிர்த்து தான் புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கினார்  என்பது முதலமைச்சருக்கு நன்றாக தெரியும்.

நாணயத்தின் இரு பக்கங்களாக எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் இருக்க வேண்டும். தற்போது, ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக, எதிர்க்கட்சியை எதிர்கொள்வதில் பூஜ்யம் அடைந்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசின் மீது பழி போடுவதும், அவதூறு பரப்புவதில் வல்லவர்கள். 

ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு, இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனை மீட்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

 முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திட, மாபெரும் சட்டப் போராட்டம் செய்து, அதன் மூலம் முல்லை பெரியார் அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்துக் கொள்ளலாம் என்ற வரலாற்றை அம்மா பெற்று தந்தார்கள்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஆனால், கேரளா அரசு ரூட் கர்வ் விதிகளை புகுத்தி ,பருவ காலத்தில் நீரை தேக்கவிடாமல் நீரைதிறந்து விட்டு, இன்றைக்கு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறது. முல்லைபெரியார் என்பது, ஐந்து மாவட்ட மக்கள் ஜீவாதார பிரச்சினையாகும். அணை வலுவாக உள்ளது என்று வல்லுநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கேரளா அரசு  சுயநலத்தை விட்டு விட வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories