திமுக.,வை எதிர்த்தே அதிமுக.,வை எம்ஜிஆர்., தொடங்கினார் என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்!

madurai udayakumar - 2026

மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் கோயில் ஆகம விதிமுறைகளை மீறினால் திமுகவிற்கு மக்களும், கடவுளும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்; திமுகவை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார் என்பது ஸ்டாலினுக்கு நன்றாக தெரியும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் பேட்டி அளித்தார்.

கழக அம்மா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனை ,முன்னாள் முதலமைச்சர், எடப்பாடியார் நடத்தி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, திருமண விழா அழைப்பிதழை, மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில், ஜனகைநாராயண பெருமாள் கோவில், குருவித்துறையில் உள்ள, சித்திர வல்லபவபெருமாள் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு, திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கும், அதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றை கழகச் செயலாளர் கொரியர் கணேசன், சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, பேரூர் கழகச் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.பி..உதயகுமார் கூறியதாவது: வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி புரட்சித்தலைவர் பிறந்த நாளை முன்னிட்டும், புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டும், கழக 51வதுஆண்டு பொன்விழாவை முன்னிட்டும்,கழக அம்மா பேரவையின் சார்பில் எனது மகள் திருமணம் உட்பட ,51 திருக்கல்யாணம் டி.குன்னத்தூர் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.

இதனை ,முன்னாள் முதலமைச்சர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் திருமணத்தை நடத்தி வைக்கிறார். தேர்தலை மையமாக வைத்து கட்சிகள் உள்ளன.

ஆனால் அதிமுகவோ மக்கள் நலனை மையக்கத்தாக கொண்டு ,ஆளுங்கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும் மக்களுக்காகஉழைத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில், ஆண்டாண்டு காலமாக வரலாற்று பதிவாக ஆகம விதிகளை கடைபிடிக்கபபட்டு வருகிறது. 

தற்போது, ஆகம விதிகளை மீறும்போது, மக்கள் மனமும் குமுறும், தெய்வம் மனமும் குமுறும் . ஆகம விதிமுறை மீறல் என்பது மக்கள் மனம் வருததப்படும்,தெய்வங்கள் மனமும் வருத்தப்படும். ,நம்முடைய நம்பிக்கையை சீர்குழைக்கும் வகையில் ஆகம விதியை மீறினால், அரசுக்கு மக்களும், கடவுளும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
புரட்சித்தலைவர் அதிக நாட்கள் திமுகவில் இருந்தார் என்று  ஸ்டாலின் பேசியுள்ளார். திராவிட கொள்கைகளை மறந்து, ஜனநாயக கொள்களை மறந்து, குடும்ப ஆட்சியை திமுக நடத்தியது.

ஏழை,எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அண்ணாவின் கொள்கைகளை உருவாக்கி, அண்ணாவின் பெயரில் அதிமுகவை ஆரம்பித்தார் புரட்சித்தலைவர்
இருக்கும்பொழுது கருணாநிதியை கோட்டை பக்கம் கூட வர விடாமல் மக்கள் தடுத்தனர். அதையெல்லாம் மறைத்துவிட்டு முதலமைச்சர், தனக்குள்ள அதிகாரத்தை வைத்து தனது சொல்லை வலிமையாக்கி உள்ளார். திமுகவை எதிர்த்து தான் புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கினார்  என்பது முதலமைச்சருக்கு நன்றாக தெரியும்.

நாணயத்தின் இரு பக்கங்களாக எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் இருக்க வேண்டும். தற்போது, ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக, எதிர்க்கட்சியை எதிர்கொள்வதில் பூஜ்யம் அடைந்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசின் மீது பழி போடுவதும், அவதூறு பரப்புவதில் வல்லவர்கள். 

ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு, இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனை மீட்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

 முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திட, மாபெரும் சட்டப் போராட்டம் செய்து, அதன் மூலம் முல்லை பெரியார் அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்துக் கொள்ளலாம் என்ற வரலாற்றை அம்மா பெற்று தந்தார்கள்.

ஆனால், கேரளா அரசு ரூட் கர்வ் விதிகளை புகுத்தி ,பருவ காலத்தில் நீரை தேக்கவிடாமல் நீரைதிறந்து விட்டு, இன்றைக்கு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறது. முல்லைபெரியார் என்பது, ஐந்து மாவட்ட மக்கள் ஜீவாதார பிரச்சினையாகும். அணை வலுவாக உள்ளது என்று வல்லுநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கேரளா அரசு  சுயநலத்தை விட்டு விட வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories