இமாச்சல பிரதேசத்தில் பாஜகவை முந்தியது காங்கிரஸ்..

இமாச்சல பிரதேசம் இழுபறி நிலை மாறியது. இமாச்சல பிரதேசத்தில் பாஜகவை முந்திய காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

இமாச்சல பிரதேசத்தில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியால் ஆட்சி அமைக்க முடியும். 12 மணிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 68 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 76.44 சதவீத வாக்குகள் பதிவானது.

அந்த மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவியது. தேர்தலுக்குரிய கருத்துக் கணிப்புகளில் அங்கு ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் இழுபறி காணப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. கருத்துக் கணிப்புகளை உறுதிபடுத்துவது போல இன்று ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அமைந்தன.

இன்று காலை 8 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில் 59 இடங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதாவும், காங்கிரசும் மாறி, மாறி முன்னிலை பெற்றன. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 35 இடங்கள் கைப்பற்றும் கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் இந்த மேஜிக் எண்ணை எட்டுவதற்கு இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. ஒருகட்டத்தில் பா.ஜனதா 34 இடங்களில் முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் கட்சியும் 34 இடங்களில் முன்னிலை பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. காலை 10 மணி அளவில் பா.ஜனதா 30 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது. எனவே காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. 10.30 மணி அளவில் மீண்டும் முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. இந்த தடவை பா.ஜனதா கட்சி 35 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. 11 மணிக்கு பிறகும் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை அடைந்தன. எனவே, ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்பதில் கடும் இழுபறி நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 12 மணிக்குப் பிறகு நிலைமை மாறி, காங்கிரசின் கை ஓங்கியது. காங்கிரஸ் கட்சி 38 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 27 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலை உள்ளதால், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

1803491 himachal - 2026
இமாச்சல் தேர்தல் முடிவை தெரிய திரண்ட மக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories