திருமலை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் டிச 12ல் ஆன்லைனில் வெளியீடு..

FB IMG 1670581664434 - 2026

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வரும் 12ம்தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வரும் 12ம்தேதி மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல், எலக்ட்ரானிக் குலுக்கலில் கலந்து கொள்ள சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளுக்கு 12ம்தேதி காலை 10 மணி முதல் 14ம்தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் தங்கள் ஆதார் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். 14ம்தேதி மதியம் 12 மணிக்கு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இந்த தகவல் பெற்றவர்கள் 2 நாட்களுக்குள் டிக்ெகட்டுகளை ஆன்லைனில் பணம் செலுத்தி பெறலாம். ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு மற்றும் 2ம்தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதனால் 11 நாட்கள் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம்தேதி முதல் 31ம்தேதி வரையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தாங்கள் விரும்பும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஐபி டிக்கெட் விற்றவர் கைது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 6 பேர் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் இந்த டிக்கெட்டுகளை ரூ.18 ஆயிரத்திற்கு வாங்கி வந்தது தெரிய வந்தது. அவை போலி என்பதும், திருமலையில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த ஹரி என்பவர், நந்திகம எம்எல்ஏவின் சிபாரிசு கடிதத்தின் பேரில் 6 விஐபி தரிசன டிக்கெட்டுகளை ரூ.18 ஆயிரத்துக்கு விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து ஹரியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories