தமிழகத்தில் இருந்து காசிக்கு 2,592 பேர் பயணம் செய்துள்ளனர்: தெற்கு ரயில்வே!

kashi tamil sangamam - 2026

உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் நடந்து வரும் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி உத்தரபிரதேச மாநிலம், காசியில் நவ.16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் டிச.16 அன்று முடிவடைகிறது.

காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே அமைந்திருக்கும் தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நுாற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவ.17ம் தேதி, முதல் ரயிலில் புறப்பட்டுச் சென்ற குழுவினரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு ஊர்களில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களில் தலா மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டு, மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிக தலைவர்கள் என பலரும் பயணம் செய்தனர்.

இந்த நிகழ்வின் நிறைவுப் பயணமாக 216 பேர் அடங்கிய குழுவினர், நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பீஹார் மாநிலம் கயா செல்லும் வாராந்திர ரயிலில் பயணம் செய்தனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்க, தமிழகத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட 12 விரைவு ரயில்களில் இதற்காக ஒதுக்கப்பட்ட 36 பெட்டிகளில் மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளனர் என்று, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories