மணல் எடுக்க தோண்டிய பள்ளத்தில் சிக்கி 5 மாணவர்கள் பலி..

images 2022 12 18T130613.210 - 2026

ஆந்திர பிரதேசம் கிருஷ்ணா நதி வெள்ளத்தில் மணல் எடுக்க தோண்டிய பள்ளத்தில் சிக்கி 5 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றின் கரையோரம் குளித்துக் கொண்டிருந்த தோட்ட சுரேஷ் திடீரென மணல் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். ஒரே பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், யானை மலைக்கு குடு பகுதியை சேர்ந்தவர்கள் தோட்ட சுரேஷ் ( 15), குணசேகர் (14), பாஜி (14), உசேன் (14), பாலு (17). பள்ளி கல்லூரி மாணவர்களான 5 பேரும் கிருஷ்ணா நதியில் குளிப்பதற்காக சென்றனர். ஆற்றில் மணல் அள்ளப்பட்டு இருந்ததால் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் இருந்தது.

தற்போது அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டு இருப்பதால் ஆற்றில் இருந்த பள்ளங்கள் தெரியவில்லை. இந்த நிலையில் ஆற்றின் கரையோரம் குளித்துக் கொண்டிருந்த தோட்ட சுரேஷ் திடீரென மணல் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்.

இதனை கண்ட சக நண்பர்கள் தோட்ட சுரேஷை காப்பாற்றுவதற்காக சென்றபோது நீச்சல் தெரியாமல் அவர்களும் தண்ணீரில் மூழ்கி அபய குரல் எழுப்பினர். அங்கிருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. 5 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதில் தோட்ட சுரேஷ், குணசேகர் ஆகிய 2 பேர் உடலையும் பொதுமக்கள் மீட்டனர்.

அதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால் மற்றவர்கள் உடல்களை மீட்க முடியவில்லை. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையே சேர்ந்த 18 வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் சேர்ந்து உள்ளூர் மீனவர்களும் ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணி நடந்தது. நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கிய இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் பாலு, பாஜி, உசேன் ஆகிய 3 பேரின் பிணங்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட மாணவர்களின் உடலை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. ஒரே பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories