காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பூஜைகளால், மந்திரங்களால் நிறைந்தது இந்தியா: ஆளுநர் ஆர்.என்.ரவி

governor rn ravi - 2026

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்தால், இந்த நாடே பூஜைகளாலும், மந்திரங்களாலும் நிரம்பி இருப்பதை உணர முடியும் என்று ஆளுநர் ரவீந்திரநாராயண் ரவி தெரிவித்தார்.

இந்திய நுண்கலைகள் குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு சென்னை ஐஐடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:

இந்தியாவின் எதிர்காலமாக திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்கள் நம் நாட்டின் ஆன்மிகம், கலாச்சாரத்தின் சிறப்பை அறிந்து கொள்ள ஆசிரியர்கள் வழிசெய்ய வேண்டும். இந்தியாவின் கலாச்சாரம் வெவ்வேறாக இருந்தாலும் அனைத்துமே ஆன்மிகம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைகின்றன.

ஆன்மிகம், கலை, கலாச்சாரம் ஆகிய கருத்துகளால் நிரம்பியது நமது அரசியலமைப்பு. நமது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை (Secularism) எனும் சொல்லுக்கு தவறான புரிதல் உள்ளது. அந்த ஆங்கில வார்த்தைக்கான ஐரோப்பிய அர்த்தத்தையே இன்று வரை பின்பற்றி வருகிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்தால், இந்த நாடே பூஜைகளாலும், மந்திரங்களாலும் நிரம்பி இருப்பதை உணர முடியும்.

மக்களுக்கான அடிப்படை உரிமைகளை எடுத்துரைக்கும் ராம ராஜ்ஜிய கருத்துகள்தான் அரசியலமைப்பில் அடங்கி யுள்ளன. அதை மக்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லை. மாறாக, நமது மாணவர்களுக்கு ஆன்மிகம் இல்லாதஅரசியலமைப்பு கற்றுத் தரப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்நிலை மாற வேண்டும்.

மேற்கத்திய நாடுகள் அடக்குமுறைகளாலும், வன்முறையாலும் உருவானவை. மாறாக, நமது பாரதம் பக்தியால் உருவானது. எது பாரதம் என்பதை கலைகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், கர்னாடக இசைக்கலைஞர் டி.வி.கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories