தாய், மனைவி, சகோதரரைக் கொன்று விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

murderநாமக்கல்: நாமக்கல் அருகே தாய், மனைவி, சகோதரர் என 3 பேரைக் கொன்ற விவசாயி, தனது நிலத்தை ஏழைகளுக்குக் கொடுத்து விடும்படி கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் மூலக்காடு பகுதியை சேர்ந்த நஞ்சப்ப கவுண்டர் என்பவரது மனைவி செட்டியம்மாள் (75). நஞ்சப்ப கவுண்டர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செட்டியம்மாள் தனது மகன்கள் காளியண்ணன் (55), பழனிவேல் (48) ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஆறரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்தும், கறவை மாடுகளை வளர்த்தும் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களில் மனநலம் பாதிக்கப்பட்ட காளியண்ணன் என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. பழனிவேலுக்கு செல்வம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் கரூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (45) என்பவரை பழனிவேல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மாட்டு தொழுவத்தில் காளியண்ணன் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் செட்டியம்மாளும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் கிருஷ்ணவேணியும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அருகில் இருந்த தானியங்கள் சேமிக்கும் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு பழனிவேல் தூக்கில் பிணமாக தொங்கியதை அக்கம்பக்கத்தினர் கண்டனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் தேடியபோது, ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் சொத்துக்களை அனாதை இல்லங்களுக்கு கொடுக்கவும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடிதத்தில் உள்ள மற்ற விவரங்களைத் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். இவரது தற்கொலைக்கான காரணமும் உடனடியாகத் தெரியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories