December 5, 2025, 7:03 PM
26.7 C
Chennai

சோழவந்தான்: ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும், பட்டதாரி இளைஞர்கள்!

jallikkattu preparation - 2025

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி, கல்லாங்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் படுத்தும் பணிகளில் பட்டதாரி இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15 16 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் வேலைகளில் காலை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

குறிப்பாக, படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்கள் காளைகளும் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலுடன் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி, கல்லாங்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பட்டதாரி இளைஞர்கள் சிலர் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த பிரகாஷ், சூர்யா, மணி, திருவாசகம், பால்பாண்டி உள்ளிட்ட பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் அவரவர் தங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தயார் படுத்தி வருகின்றனர் .

இது குறித்து, ஜல்லிக்கட்டு காளையை தயார்படுத்தி வரும் பட்டதாரி இளைஞர் மணி கூறும் போது:

தமிழகத்தின் பாரம்பரிய பெருமைக்காகவும் வீரத்தை தெளிவு படுத்துவதற்கும் மக்களின் பழைய கலாச்சாரம் காக்கப் படுவதற்காகவும் எங்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம் குறிப்பாக கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக நாங்கள் அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஊர்களுக்கு காளைகளை நடந்து கூட்டிச் சென்று வருவோம் ,
ஆனால், தற்போது அதற்காக சிறப்பு கவனம் எடுத்து வாகனங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து சென்று வருகிறோம் .
மேலும், இந்த காளைகளுக்கு எங்கள் ஊரின் அருகில் உள்ள தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் பயிற்சி கொடுத்து வருகிறோம்.

இதில், முக்கியமாக நடைப்பயிற்சி நீச்சல் பயிற்சி ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறோம் . ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உணவாக நாட்டு பருத்தி விதை, முதிர்ந்த தேங்காய் பருப்பு, வைக்கோல், நாட்டுக்கோழி முட்டை உள்ளிட்ட பல்வேறு சத்துள்ள தீவனத்தை வழங்கி வருகிறோம்.

எங்கள் வீட்டு பெண்களும் இதற்காக தனிக் கவனம் செலுத்தி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தண்ணீர் வைப்பது அதற்கு நேரத்திற்கு உணவு அளிப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். எங்கள் ஊரில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று போட்டிகளில் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தங்கம் வெள்ளி காசு அண்டா சில்வர் பாத்திரம் போன்ற பரிசுகளை பெற்று வந்திருக்கிறது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories