ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு‌ பொதுமக்கள் போராட்டம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் உள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவிர்த்தான் ஊராட்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலத்துறை கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலையில் வடுகப்பட்டி முதல் தெற்கு வெங்காநல்லூர் வரையிலான 36 கிலோமீட்டர் நெடுஞ்சாலை பணிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவித்தான் ஊராட்சியில் கல் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கல்குவாரி அமைப்பதற்கு இந்தப் பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

56 ஏக்கர் பரப்பளவில் கல்குவாரி அமையும் இடத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டு இயந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. குடியிருப்பு மற்றும் விலை நிலங்களுக்கு அருகே கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் முருகன் என்ற விவசாயி, எள் அறுவடை செய்வதற்காக தொழிலாளர்களை அழைத்துச் சென்றார். அப்போது கல்குவாரியின் நுழைவாயிலை அடைத்து இவ்வழியாக செல்ல கூடாது என காவலாளி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை கண்டித்து அச்சம் தவிர்த்தான் மற்றும் நரியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்குவாரி நுழைவாயிலின் முன்னமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டாட்சியர் நேரில் வந்து விவசாய நிலங்களுக்குச் செல்ல உரிய பாதை வசதி ஏற்படுத்தி தந்தால் மட்டுமே இவ்விடத்தை விட்டு செல்வோம் என்று கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories