ராமர் சேது பாலம் நினைவு சின்னமாக்க மத்திய அரசு பரிசீலனை..

500x300 1823529 4 - 2026

ராமர் சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இதனையடுத்து சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

தமிழகத்தின் பாம்பன்தீவில் இருந்து, நம் அண்டை நாடான இலங்கையின் வடமேற்கே உள்ள மன்னார் தீவு வரையில், கடலில் ராமர் சேது பாலம் அமைந்துள்ளதாக ஹிந்துக்கள் நம்புகின்றனர். ராமாயண காலத்தில் இலங்கைக்கு செல்வதற்காக, ராமர் இந்தப் பாலத்தை கடலில் அமைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, கடல்வழி போக்குவரத்துக்காக இந்தப் பகுதியை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்டது. ஆனால், கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், 2007 ல் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், இத்திட்டத்தை செயல்படுத்த தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து, ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி, சுப்பிரமணியன் சாமி பொது நலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா அமர்வில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது கடந்தாண்டு டிசம்பரில் பதில் மனு தாக்கல் செய்வதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என சாமி குறிப்பிட்டார். மேலும் அவகாசம் அளிக்கும்படி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளது.இதனையடுத்து சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம், அரசின் முடிவு திருப்தி அளிக்காவிட்டால், மீண்டும் வழக்கு தொடர அனுமதி அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

Topics

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories