சென்னை நகைக்கடை கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது- சங்கர் ஜிவால்

சென்னை நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை சம்பவத்தில் வெளிமாநில கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

1145062 cni23feb1510 - 2026

சென்னையில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து பின்னால் உட்கார்ந்து வரும் 5,600 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,

சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளை போன வழக்கில் நல்ல தடயங்கள் கிடைத்துள்ளன. 7 தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது. மேலும் கூடுதலாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

ஒரு இணை கமிஷனர், 2 துணை கமிஷனர்கள் தலைமையில் விசாரணை நடக்கிறது. வெளிமாநில கொள்ளையர்கள் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து குற்றவாளிகள் பிடிபட்டு உள்ளனர்.

அந்த வழக்குகளில் பிடிபட்டுள்ள குற்றவாளிகளின் பெயர் பட்டியலை சேகரித்து விசாரித்து வருகிறோம். அதில் சிலரது அடையாளம் தெரிந்துள்ளது. பெயர்களும் கிடைத்துள்ளன. விரைவில் இந்த வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள். 3 உதவி கமிஷனர்கள் தலைமையில் வெளிமாநிலங்களுக்கு தனிப்படையினர் சென்று உள்ளனர்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் போலியானது. தமிழக பதிவு எண் வாகனத்தில் வந்துள்ளனர். வெளிமாநிலத்துக்கு தப்பிச்செல்லும் போது அதை மாற்றி உள்ளனர். வெளிமாநிலத்துக்கு தப்பிச்சென்று விட்டதால், அவர்களை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

சவுகார்பேட்டை கொள்ளை வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொள்ளை போன பணத்தில் ரூ.70 லட்சம் அளவுக்கு மீட்கப்பட்டு உள்ளது. கொள்ளை பணத்தில் வாங்கப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதாக தகவல் இல்லை.என கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories