சென்னை நகைக்கடை கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது- சங்கர் ஜிவால்

சென்னை நகைக்கடையில் 9 கிலோ நகை கொள்ளை சம்பவத்தில் வெளிமாநில கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

1145062 cni23feb1510 - 2026

சென்னையில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து பின்னால் உட்கார்ந்து வரும் 5,600 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,

சென்னை பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளை போன வழக்கில் நல்ல தடயங்கள் கிடைத்துள்ளன. 7 தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது. மேலும் கூடுதலாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

ஒரு இணை கமிஷனர், 2 துணை கமிஷனர்கள் தலைமையில் விசாரணை நடக்கிறது. வெளிமாநில கொள்ளையர்கள் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து குற்றவாளிகள் பிடிபட்டு உள்ளனர்.

அந்த வழக்குகளில் பிடிபட்டுள்ள குற்றவாளிகளின் பெயர் பட்டியலை சேகரித்து விசாரித்து வருகிறோம். அதில் சிலரது அடையாளம் தெரிந்துள்ளது. பெயர்களும் கிடைத்துள்ளன. விரைவில் இந்த வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள். 3 உதவி கமிஷனர்கள் தலைமையில் வெளிமாநிலங்களுக்கு தனிப்படையினர் சென்று உள்ளனர்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் போலியானது. தமிழக பதிவு எண் வாகனத்தில் வந்துள்ளனர். வெளிமாநிலத்துக்கு தப்பிச்செல்லும் போது அதை மாற்றி உள்ளனர். வெளிமாநிலத்துக்கு தப்பிச்சென்று விட்டதால், அவர்களை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

சவுகார்பேட்டை கொள்ளை வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொள்ளை போன பணத்தில் ரூ.70 லட்சம் அளவுக்கு மீட்கப்பட்டு உள்ளது. கொள்ளை பணத்தில் வாங்கப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதாக தகவல் இல்லை.என கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories