ஜெராக்ஸ் கடை மூலம்ரூ.12 கோடி பரிவர்த்தனையா?..

- 2026
#image_title

ராஜஸ்தானில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவருக்கு கடந்த நிதியாண்டில் ரூ.12 கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதாகவும், இந்த வருமானத்துக்கு விளக்கம் கேட்டும் வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிஷன் கோபால் சப்பர்வால் (38). இவர் ஜெராக்ஸ் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த நிதியாண்டில் சப்பர்வால் ரூ.12 கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதாகவும், இந்த வருமானத்துக்கு விளக்கம் கேட்டும் வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

இதுகுறித்து சபர்வால் கூறுகையில், “குஜராத்தில் உள்ள சூரத்துக்கும், பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் பிற இடங்களுக்கும் நான் இதுவரை சென்றதே இல்லை. வருமான வரி துறை எனக்கு அனுப்பிய நோட்டீஸை காண்பித்து நண்பர்களிடம் ஆலோசித்ததில் எனது பான் கார்டு மற்றும் பிற ஆவணங்களை பயன்படுத்தி போலி நிறுவனங்களுக்காக இந்த பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என காவல் துறையினரிடமும், வருமான வரி துறையினரிடமும் முறையிட்டு வருகிறேன்” என்றார்.

இதேபோன்ற சம்பவம் மத்திய பிரதேசத்திலும் அரங்கேறியுள்ளது. பிண்டு நகரைச் சேர்ந்த ரவி குப்தா மாதம் ரூ.58,000 மட்டுமே சம்பளம் வாங்கும் நிலையில் ரூ.133 கோடி வரி செலுத்துமாறு வருமான வரி துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011-12-ல் அவரது கணக்கில் மேற்கொள்ளப்பட்டிருந்த ரூ.132 கோடி பணப்பரிவர்த்தனைக்காக இந்த தொகையை டெபாசிட் செய்யும்படி வருமான வரி துறை கூறியுள்ளது. இதுகுறித்து அவர் பிரதமரின் அலுவலகத்தில் புகார் தெரிவித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையிலும் வருமான வரி துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

குப்தாவுக்கு கடந்த 2019-லும் ரூ.3.5 கோடிக்கான அபராத நோட்டீஸ் வருமான வரி துறையால் வழங்கப்பட்டது. அப்போது, அவர் ஒரு பிபிஓ நிறுவனத்தில் மாதம் ரூ.7,000 சம்பளத்தில்தான் வேலை செய்து வந்துள்ளார்.

மோசடி பேர்வழிகள் பிறரின் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. நிதி விவகாரங்களில் மிகவும் கவனமாக செயல்பட நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories