ஜெராக்ஸ் கடை மூலம்ரூ.12 கோடி பரிவர்த்தனையா?..

- 2026
#image_title

ராஜஸ்தானில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவருக்கு கடந்த நிதியாண்டில் ரூ.12 கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதாகவும், இந்த வருமானத்துக்கு விளக்கம் கேட்டும் வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிஷன் கோபால் சப்பர்வால் (38). இவர் ஜெராக்ஸ் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த நிதியாண்டில் சப்பர்வால் ரூ.12 கோடிக்கு பரிவர்த்தனை மேற்கொண்டதாகவும், இந்த வருமானத்துக்கு விளக்கம் கேட்டும் வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

இதுகுறித்து சபர்வால் கூறுகையில், “குஜராத்தில் உள்ள சூரத்துக்கும், பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் பிற இடங்களுக்கும் நான் இதுவரை சென்றதே இல்லை. வருமான வரி துறை எனக்கு அனுப்பிய நோட்டீஸை காண்பித்து நண்பர்களிடம் ஆலோசித்ததில் எனது பான் கார்டு மற்றும் பிற ஆவணங்களை பயன்படுத்தி போலி நிறுவனங்களுக்காக இந்த பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என காவல் துறையினரிடமும், வருமான வரி துறையினரிடமும் முறையிட்டு வருகிறேன்” என்றார்.

இதேபோன்ற சம்பவம் மத்திய பிரதேசத்திலும் அரங்கேறியுள்ளது. பிண்டு நகரைச் சேர்ந்த ரவி குப்தா மாதம் ரூ.58,000 மட்டுமே சம்பளம் வாங்கும் நிலையில் ரூ.133 கோடி வரி செலுத்துமாறு வருமான வரி துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011-12-ல் அவரது கணக்கில் மேற்கொள்ளப்பட்டிருந்த ரூ.132 கோடி பணப்பரிவர்த்தனைக்காக இந்த தொகையை டெபாசிட் செய்யும்படி வருமான வரி துறை கூறியுள்ளது. இதுகுறித்து அவர் பிரதமரின் அலுவலகத்தில் புகார் தெரிவித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையிலும் வருமான வரி துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

குப்தாவுக்கு கடந்த 2019-லும் ரூ.3.5 கோடிக்கான அபராத நோட்டீஸ் வருமான வரி துறையால் வழங்கப்பட்டது. அப்போது, அவர் ஒரு பிபிஓ நிறுவனத்தில் மாதம் ரூ.7,000 சம்பளத்தில்தான் வேலை செய்து வந்துள்ளார்.

மோசடி பேர்வழிகள் பிறரின் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. நிதி விவகாரங்களில் மிகவும் கவனமாக செயல்பட நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories