சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 110 கி.மீ வேகத்தில் இயக்க முடிவு..

images 23 - 2026
#image_title

110 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ள சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலை நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார் .வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி நேரம் 50 நிமிடங்களாகும்.

சென்னை- கோவை-சென்னை இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த ரெயில் சேவையை நாளை (8-ந் தேதி) மாலை பிரதமர் மோடி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.

இதற்கிடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதன்கிழமையை தவிர மற்ற 6 நாட்களிலும் இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரெயில் இரவு 10 மணிக்கு கோவை ரெயில் நிலையத்திற்கு வருகிறது. பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்தே பாரத் ரெயில் (ரெயில் எண்:20644) புறப்படுகிறது. இந்த ரெயில் 6.35 மணிக்கு திருப்பூர், 7.12 மணிக்கு ஈரோடு, 7.58-க்கு சேலம், 9.35-க்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்று, பின்னர் முற்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரல்-கோவை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (20643) மதியம் 2.25 மணிக்கு புறப்படுகிறது. 4.40 மணிக்கு ஜோலார்பேட்டை, 5.48 மணிக்கு சேலத்துக்கும், 6.32க்கு ஈரோடு, 6.13 மணிக்கு திருப்பூர் வந்து, இரவு 8.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.

இந்த வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி நேரம் 50 நிமிடங்கள். வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரம் அறிவித்ததை அடுத்து இன்று முதல் முன்பதிவும் தொடங்கியுள்ளது. இந்த ரெயிலில் பயணிக்க பலரும் ஆர்வம் காட்டி வருவதால் இன்று காலை முதலே முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை-கோவை-சென்னை இடையே நாளை முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 8 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் 450 இரண்டாம் நிலை இருக்கைகளும், 56 முதல் நிலை இருக்கைகளும் உள்ளன. முதல் நிலை இருக்கைக்கு ரூ.2,310-ம், இரண்டாம் நிலை இருக்கைக்கு ரூ.1215 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

வந்தே பாரத் ரெயில் 110 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். தற்போது இந்த ரெயிலில் பயணிப்பதற்கான முன்பதிவுகள் தொடங்கி உள்ளது. பயணிக்க விரும்புவோர் இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். புதன்கிழமையை தவிர வாரத்தில் 6 நாட்களும் இந்த ரெயில் இயக்கப்படும். இந்த ரெயிலின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் கோவையிலேயே நடக்கும்.

பயணிகளின் வரவேற்பை பொறுத்து பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் 2 கட்டமாக நடந்தது.

கடந்த 30-ந் தேதி காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 11.20 மணிக்கு கோவைக்கு வந்தது. முதல் சோதனை ஓட்டத்தின்போது சுமார் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் வந்தே பாரத் ரெயில் கோவை வந்தது.

தொடர்ந்து நேற்று முன்தினம் 2-வது கட்டாக சோதனை ஓட்டம் நடந்தது. காலை 5.40 மணிக்கு புறப்பட்ட ரெயில் காலை 11.40 மணிக்கு கோவைக்கு வந்தது. 2 கட்டமாக நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களும் வெற்றியடைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories