சிவகாசியில் 90 பவுன் கொள்ளை தெலுங்கானாவை சேர்ந்த இருவர் கைது..

IMG 20230408 WA0073 - 2026
#image_title

சிவகாசியில் 90 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்
தெலுங்கானாவை சேர்ந்த இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தின் பல இடங்களில் கொள்ளையடித்து ஒன்றரை கோடியில் சொகுசு பங்களா வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த குல்லா திருடர்கள் என தெரியவந்துள்ளது.

சிவகாசி அருகே சித்துராஜபுரம் தேவி நகரைச் சேர்ந்தவர் அச்சக அதிபர் பத்மநாபன் (67). இவர் கடந்த ஜனவரி மாதம் 25 ம்தேதி திருப்பதி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில் இவரது வீட்டின் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 90 பவுன் தங்க நகை, வைர நெக்லஸ், 3 ஜோடி வைர கம்மல், 73 கிராம் எடையில் ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு, ஒரு லட்சம் ரொக்கம் திருடு போனது. அதே நாளில் அந்த பகுதியில் உள்ள தனசேகரன், சிவரம்யா உள்பட 3 பேரின் வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம கும்பல் நகை, பணம் ஆகியவற்றை அள்ளிச் சென்றுள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..
IMG 20230408 WA0072 - 2026
#image_title

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மாவட்ட எஸ்பி சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில், சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் ஆலோசனையின் பேரில் திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்ததில் அந்த வழியே வடமாநில வாலிபர்கள் அடிக்கடி நோட்டமிடுவதும் சம்பவத்தன்று குல்லா அணிந்த இருவர் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இந்த சிசிடிவி பதிவுகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனபதை உறுதி செய்த காவல்துறை தெலுங்கானாவில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு தெலுங்கான மாநிலம் வாறாங்கல் வட பள்ளி சர்ச் பகுதியை சேர்ந்த சிவா (24) சூரியா ( 23) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 30 பவுன் நகைகளை மீட்டனர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தின் சென்னை மதுரை உள்ளிட்ட நகரங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், கொள்ளையடித்த பணம் நகையை வைத்து ஒன்றரை கோடியில் சொகுசு பங்களா வாங்கியதுடன் அவ்வப்போது கோவா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளதும், சிவகாசிக்கு சுயதொழில் செய்ய வந்துள்ளதாக சிலரிடம் அறிமுகமாகி வீடு தேடுவது போல் நடித்து கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்களை நோட்டமிட்டு அவர்கள் வெளியூர் சென்றபோது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். கொள்ளை வழக்கில் இவர்களுடன் தொடர்புடைய தெலுங்கானாவை சேர்ந்த மேலும் சிலர் உள்ளதாகவும் மீதமுள்ள நகையை மீட்ப்பதற்காகவும் இவர்களுடன் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்யவும் தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் முகாமிட்டுள்ளனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories